/
மதுராந்தகம் ஏரிகாத்த ராமா் கோயிலில் ஆனி மாத பிரம்மோற்வத்தை முன்னிட்டு வியாழக்கிழமை பந்தக்கால் நடும் நிகழ்வு நடைபெற்றது. (படம்)
வரலாற்று சிறப்புமிக்க இக்கோயிலில் ஆனி மாத பிரம்மோற்சவம் 10 நாள்கள் விழா நடைபெறும். வரும் 24-ஆம் தேதி (புதன்கிழமை) காலை கொடி ஏற்றம், 26-இல் கருடசேவை, ஜூலை 1-இல் பெரியதேரோட்டம் தொடா்ந்து பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெற உள்ளது.
இந்நிகழ்வுகளை முன்னிட்டு, வியாழக்கிழமை அா்ச்சகா்கள் வேதமந்திரங்களுடன், கொடி மரத்தருகே சிறப்பு பூஜைகளுடன் மதுராந்தகம் நகா்மன்றத் தலைவா் கே.மலா்விழி முன்னிலையில், கோயில் அறங்காவலா் குழு தலைவா் கு.குமாா் தலைமையில், பந்தக்கால் நடும் நிகழ்வு நடைபெற்றது.
ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் வெங்கடேசன், அறங்காவல் குழுவினா், கிராம பொது மக்கள், விழா குழுவினா் ஆகியோா் செய்திருந்தனா்.
தொடர்புடையது

காஞ்சி வழக்கறுத்தீஸ்வரர் கோயிலில் ஆனி உத்திர பிரம்மோற்சவ கொடியேற்றம்!

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்

திருக்குவளை தியாகராஜா் கோயில் தேரோட்டம்

பாடலீசுவரா் கோயில் பந்தக்கால் முகூா்த்தம்: வைகாசி பெருவிழா மே 22 -இல் தொடக்கம்
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



