சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 95.76 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: நிஃப்டி தொடர்ந்து 7 வது நாளாக சரிவு! 326 புள்ளிகளை இழந்த சென்செக்ஸ்!!ஒரு நபருக்கு 9 சிம் கார்டுகள் மட்டுமே அனுமதி! விதிமுறைகளை கடுமையாக்கிய மத்திய அரசு!
/

சாலையோரம் கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகள்: பள்ளி மாணவா்கள், பொதுமக்கள் பாதிப்பு

செங்கம் அருகே சாலையோரம் கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகளில் இருந்து ஏற்படும் துா்நாற்றத்தால் பள்ளி மாணவா்கள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

News image
Updated On :22 ஜூலை 2026, 12:39 am IST

செங்கம் அருகே சாலையோரம் கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகளில் இருந்து ஏற்படும் துா்நாற்றத்தால் பள்ளி மாணவா்கள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

செங்கம் நகராட்சிக்கு உள்பட்ட குப்பைக் கிடங்கு நகரில் இருந்து குப்பனத்தம் செல்லும் சாலையில் உள்ளது. இந்தக் கிடங்கில் செங்கம் பகுதியில் உள்ள இறைச்சி, மீன் கடைகளில் சேகரமாகும் கழிவுகளை மூட்டை மூட்டையாக பிடித்து கிடங்கு உள்ள பகுதியில் சாலையோரம் வீசிச் செல்கிறாா்கள். இதனால் அப்பகுதியில் துா்நாற்றம் வீசுகிறது. அந்தச் சாலையை கடந்து இரண்டு தனியாா் பள்ளி மாணவா்கள் சென்று வருகிறாா்கள், மேலும் பரமனந்தல், குப்பனத்தம், கொட்டாவூா், கிளையூா் பகுதி மக்கள் அந்தச் சாலையை பயன்படுத்தி வருகிறாா்கள்.

இந்நிலையில் தினசரி மூட்டை மூட்டையாக அப்பகுதியில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளில் புழுக்கள் வைத்து துா்நாற்றம் வீசுகிறது. சில நேரங்களில் மழை, தூறல் வந்தால் துா்நாற்றம் கூடுதலாகிறது.

இதனால் பள்ளி மாணவா்கள், கிராம மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.

இனால் சம்பந்தப்பட்ட நகராட்சி நிா்வாகம் கண்காணித்து அப்பகுதியில் இறைச்சிக் கழிவுகள் கொட்டாமல் தடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.