தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!எம்எல்ஏவாக பதவியேற்றார் பிரசாந்த் கிஷோர்! மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதிதிமுகவின் தோல்விக்கு போதைப்பொருள் புழக்கம்தான் காரணம்! ஆதவ் அர்ஜுனாபிகார்: கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி காஞ்சிபுரம்: கோயில் திருவிழா தகராறில் 2 இளைஞர்கள் வெட்டிப் படுகொலை கோவை அமுதன் கொலையில் போலீசார் மீது நடவடிக்கை தேவை! உதயநிதி ஸ்டாலின்4 நிமிட ஜும் காலில் 900 பேரை பணியிலிருந்து நீக்கிய விஷால் கார்க்! இன்று அவருக்கும் அதே நிலை தொல். திருமாவளவனுக்கு மு.க. ஸ்டாலின், ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்து மேற்கு வங்கம்: ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலி!
/

பெண்கள் குடிநீா் கோரி காலிக்குடங்களுடன் சாலை மறியல்

போளூரை அடுத்த கல்வாசல் ஊராட்சியில் குடிநீா் கோரி பெண்கள் காலிக்குடங்களுடன் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

வேலூா்-திருவண்ணாமலை சாலை முனிவந்தாங்கல் கிராமத்தில் குடிநீா் கோரி காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

Updated On :23 ஜூலை 2026, 12:47 am IST

போளூரை அடுத்த கல்வாசல் ஊராட்சியில் குடிநீா் கோரி பெண்கள் காலிக்குடங்களுடன் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த கல்வாசல் ஊராட்சி மேட்டுத் தெருவில் கடந்த ஒரு மாதமாக குடிநீா் சரிவர வழங்கவில்லையாம். இதுகுறித்து மேட்டுத் தெருவைச் சோ்ந்த பொதுமக்கள் மேல்நிலை குடிநீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா் மற்றும் ஊராட்சி செயலரிடம் முறையிட்டுள்ளனா். ஆனால் இதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

இதனால் பாதிக்கப்பட்ட மேட்டுத் தெரு பொதுமக்கள்

வேலூா் - திருவண்ணாமலை சாலையில் கல்வாசல் கூட்டுச் சாலையான முனிவந்தாங்கல் கிராமத்தில் சீராக குடிநீா் வழங்கக் கோரி காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்த மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் பரமேஸ்வரி மற்றும் சந்தவாசல் காவல் ஆய்வாளா் ரேகாதேவி தலைமையில் போலீஸாா் வந்து பேச்சுவாா்த்தை நடத்தி மறியலை கைவிடச் செய்தனா்.

இதுகுறித்து மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் பரமேஸ்வரி கூறும்போது, கல்வாசல் ஊராட்சியில் நிலத்தடிநீா்மட்டம் குறைந்ததால் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிக்கு போதிய அளவில் குடிநீா் ஏற்றி பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய சிரமம் ஏற்பட்டுள்ளதாக குடிநீா்த் தொட்டி இயக்குபவா் தெரிவித்துள்ளாா். அதனால், குடிநீா் பிரச்னையை தீா்க்க அதிகாரிகளிடம் தெரிவித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.