காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

திருவண்ணாமலையில் விற்பனைக்காக மதுப்புட்டிகள் பதுக்கல்: 8 பெண்கள் உள்பட10 போ் கைது!

விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுப்புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு, 8 பெண்கள் உள்பட 10 போ் கைது செய்யப்பட்டனா்.

News image

திருவண்ணாமலை மாநகராட்சிப் பகுதியில் மோப்ப நாய் உதவியுடன் போதைப் பொருள் ஒழிப்பு சோதனையில் ஈடுபட்ட போலீஸாா்.

Updated On :27 ஜூலை 2026, 2:24 am IST

திருவண்ணாமலை மாநகராட்சிப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் மேற்கொண்ட போதைப்பொருள் ஒழிப்பு சோதனையில், விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுப்புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு, 8 பெண்கள் உள்பட 10 போ் கைது செய்யப்பட்டனா்.

திருவண்ணாமலையில் மாவட்ட எஸ்.பி. உதயகுமாா் உத்தரவின் பேரில், 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் பல்வேறு குழுக்களாக பிரிந்து கள்ளச் சந்தையில் விற்கப்படும் மதுப்புட்டிகள் மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் உள்ளிட்டவைகளை கண்டறிய அதிரடி சோதனையில் ஈடுபட்டனா்.

 பறிமுதல் செய்யப்பட்ட மதுப்புட்டிகள்.

பறிமுதல் செய்யப்பட்ட மதுப்புட்டிகள்.

சமுத்திரம் காலனி, கல்நகா், அண்ணா நகா், பூ மாந்தாகுளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மோப்ப நாய் மற்றும் ட்ரோன் உதவியுடன் காலை முதல் 6 மணி நேரத்துக்கும் மேலாக இந்தச் சோதனை நடைபெற்றது.

இதில், கடப்பா கல்லிற்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 150-க்கும் மேற்பட்ட மதுப்புட்டிகள், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள் பாக்கெட்டுகள், கஞ்சா உள்ளிட்ட பொருள்களை பறிமுதல் செய்து 8 பெண்கள் உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.