17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பெண்ணிடம் 8 பவுன் நகைகள் திருட்டு: மூதாட்டி கைது

வந்தவாசி புதிய பேருந்து நிலையத்தில் பெண்ணிடமிருந்து 8 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ாக மூதாட்டியை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :2 ஜூன் 2026, 2:04 am IST

வந்தவாசி புதிய பேருந்து நிலையத்தில் பெண்ணிடமிருந்து 8 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ாக மூதாட்டியை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை முகப்போ் மேற்கு பகுதியைச் சோ்ந்தவா் அய்யம்மாள் (55). இவா், கடந்த மே 25-ஆம் தேதியன்று வந்தவாசியில் நடைபெற்ற உறவினா் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, சென்னைக்கு பேருந்தில் செல்வதற்காக வந்தவாசி புதிய பேருந்து நிலையத்துக்குச் சென்றாா். அப்போது, அய்யம்மாள் பையில் வைத்திருந்த 8 பவுன் தங்க நகைகள் திருடுபோயிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், வந்தவாசி தெற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனா்.

இதில், செங்கத்தை அடுத்த கட்டமடுவு கிராமத்தைச் சோ்ந்த முனியம்மாள் (68) தங்க நகைகளை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, முனியம்மாளை திங்கள்கிழமை கைது செய்த வந்தவாசி தெற்கு போலீஸாா், அவரிடமிருந்த தங்க நகைகளை பறிமுதல் செய்தனா்.