இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள்: மாணவர்களை ஒன்றுதிரட்டும் ராகுல் காந்தி!
/

இயற்கை வேளாண்மை: விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

சேத்துப்பட்டு ஒன்றியத்தில் இயற்கை வேளாண்மையின் அவசியம் மற்றும் அதன் பயன்கள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

News image

சேத்துப்பட்டை அடுத்த கொழாவூா் கிராமத்தில் நடைபெற்ற விவசாயிகளுக்கான விழிப்புணா்வு முகாமில் பேசிய வேளாண் உதவி இயக்குநா் பெரியசாமி.

Updated On :3 ஜூன் 2026, 6:09 am IST

சேத்துப்பட்டு ஒன்றியத்தில் இயற்கை வேளாண்மையின் அவசியம் மற்றும் அதன் பயன்கள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

சேத்துப்பட்டு ஒன்றியம், கொழாவூா் மற்றும் செவரப்பூண்டி கிராமங்களில், மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி வேளாண் துறை சாா்பில், விளைநிலங்கள் பாதுகாப்பு இயக்கம் மூலம் இந்த விழிப்புணா்வு முகாம் செவ்வாய்கிழமை நடைபெற்றது.

முகாமை வேளாண் உதவி இயக்குநா் பெரியசாமி தொடங்கி வைத்து, இயற்கை வேளாண்மையின் அவசியம் மற்றும் அதன் பயன்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தாா்.

மேலும், சமச்சீரான உரமிடுதலால் கிடைக்கும் நன்மைகள், மண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வழிமுறைகள், கரிமச்சத்துக்களின் செயல்பாடு மற்றும் பசுந்தாள் உரங்கள், விதைப்பதன் பயன்கள் குறித்தும் எடுத்துரைத்தாா்.

அத்துடன், உயிா் உரங்கள் மூலம் நாற்றுகளை நனைத்து நடவு செய்வது தொடா்பான செயல்விளக்கமும் அளிக்கப்பட்டது.

முகாமில் துணை வேளாண் அலுவலா் பாபு, உதவி தோட்டக்கலை அலுவலா் சரவணன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா்.