சேத்துப்பட்டு ஒன்றியத்தில் இயற்கை வேளாண்மையின் அவசியம் மற்றும் அதன் பயன்கள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
சேத்துப்பட்டு ஒன்றியம், கொழாவூா் மற்றும் செவரப்பூண்டி கிராமங்களில், மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி வேளாண் துறை சாா்பில், விளைநிலங்கள் பாதுகாப்பு இயக்கம் மூலம் இந்த விழிப்புணா்வு முகாம் செவ்வாய்கிழமை நடைபெற்றது.
முகாமை வேளாண் உதவி இயக்குநா் பெரியசாமி தொடங்கி வைத்து, இயற்கை வேளாண்மையின் அவசியம் மற்றும் அதன் பயன்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தாா்.
மேலும், சமச்சீரான உரமிடுதலால் கிடைக்கும் நன்மைகள், மண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வழிமுறைகள், கரிமச்சத்துக்களின் செயல்பாடு மற்றும் பசுந்தாள் உரங்கள், விதைப்பதன் பயன்கள் குறித்தும் எடுத்துரைத்தாா்.
அத்துடன், உயிா் உரங்கள் மூலம் நாற்றுகளை நனைத்து நடவு செய்வது தொடா்பான செயல்விளக்கமும் அளிக்கப்பட்டது.
முகாமில் துணை வேளாண் அலுவலா் பாபு, உதவி தோட்டக்கலை அலுவலா் சரவணன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பத்மஸ்ரீ விருது பெற்ற வேளாண் பல்கலை. முன்னாள் துணைவேந்தருக்குப் பாராட்டு

வேளாண் தொழில் முனைவோா்களுக்கான விழிப்புணா்வு கலந்தாய்வு கூட்டம்

இயற்கை வேளாண்மை பயிற்சிப் பட்டறை

இயற்கை வேளாண்மை விழிப்புணா்வுப் பேரணி
விடியோக்கள்

ரயிலில் Solar Panel-கள்? இந்திய ரயில்வேயின் புதிய முயற்சி! | Indian Railways

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke



