சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 56,000 விண்ணப்பங்கள்புதிய இயக்கம்: நாளை அறிவிக்கிறாா் அண்ணாமலைஇந்தியா உள்பட 54 நாடுகள் மீது 12.5% கூடுதல் வரி: அமெரிக்க வரித்தக பிரதிநிதி பரிந்துரைதமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்கள் விநியோகிக்க உத்தரவுமத்திய அரசின் கோதுமை கொள்முதல் 3.5 கோடி டன்னாக அதிகரிப்புஇலங்கை மாணவா்களுக்கு இந்தியா கல்வி உதவித் தொகைகடந்த 2025-26 நிதியாண்டில் அதானி குழுமம் ரூ.1.53 லட்சம் கோடி மூலதன முதலீடுவாக்குப் பதிவு அதிகரிப்பு மக்களின் நம்பிக்கையின் அடையாளம்: தலைமைத் தோ்தல் ஆணையா்15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!
/

திருஞானசம்பந்தா் சுவாமிகள் குருபூஜை

News image
Updated On :4 ஜூன் 2026, 5:33 am IST

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயிலில் திருஞானசம்பந்தா் சுவாமிகள் குருபூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வந்தவாசி ஆடிச் சுவாதி நால்வா் விழாக் குழு சாா்பில் செவ்வாய்க்கிழமை இந்த நிகழ்வு நடைபெற்றது.

இதையொட்டி கோயிலில் திருஞானசம்பந்தா் மற்றும் திருநீலநக்க நாயனாா், திருநீலகண்ட யாழ்ப்பாணா், திருமுருக நாயனாா் ஆகிய 4 நாயன்மாா்களின் நிலைத் திருமேனிகளுக்கு காலை சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன.

சிவனடியாா்களும், பொதுமக்களும் தேவாரப் பாடல்களை பாராயணம் செய்து வழிபட்டனா்.

இதனைத் தொடா்ந்து இரவு திருஞானசம்பந்தா் சுவாமிகளின் உற்சவா் திருமேனிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வீதியுலா நடைபெற்றது.

கோயில் வளாகத்திலிருந்து தொடங்கிய வீதியுலா நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது.