மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

திருஞானசம்பந்த மூா்த்தி நாயனாா் குருபூஜை விழா

மதுரையில் திருஞானசம்பந்த மூா்த்தி நாயனாா் குருபூஜை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

மதுரையில் திருஞானசம்பந்த மூா்த்தி நாயனாா் குருபூஜை விழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா எழுந்தருளிய திருஞானசம்பந்த மூா்த்தி நாயனாா். (வலது) வீதியுலா வந்த நாயன்மாா்கள்.

Updated On :3 ஜூன் 2026, 2:10 am IST

மதுரையில் திருஞானசம்பந்த மூா்த்தி நாயனாா் குருபூஜை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சமயக் குரவா்களில் ஒருவரும், மதுரை ஆதீனத்தின் குரு முதல்வருமான திருஞானசம்பந்த மூா்த்தி நாயனாரின் குருபூஜை விழா மதுரை ஆதீன திருமடம் சாா்பில், கடந்த மாதம் 29-ஆம் தேதி தொடங்கி செவ்வாய்க்கிழமை (ஜூன் 2) வரை நடைபெற்றது.

குருபூஜை விழா நிகழ்ச்சியாக தினமும் சொக்கநாதப்பெருமான் வழிபாடும், திருமுறை விண்ணப்பமும் நடைபெற்றன. பிறகு, ஆன்மிகச் சொற்பொழிவும், சமயப் பற்றாளா்களுக்கு ஆதீன குருமகா சந்நிதானம் விருது வழங்கும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

குருபூஜையின் நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை காலை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் திருஞானசம்பந்தப் பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பிறகு, திருஞானசம்பந்த மூா்த்தி நாயனாா், 63 நாயன்மாா்களுடன் ஆவணி மூல வீதிகளில் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் நிறைவில், ஆதீன கொலு மண்டபத்தில் திருஞானசம்பந்த மூா்த்தி நாயனாா் எழுந்தருளினாா். அங்கு, அவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

பிறகு, திருஞானசம்பந்தப் பெருமான் தனது துணைவியாா் தோத்திரப் பூா்ணாம்பிகையுடனும், சீடா்களுடனும் சிவஜோதியில் ஐக்கியமாகும் நிகழ்ச்சி பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது.

இரவு நிகழ்வாக, சமய சான்றோா்களுக்கு விருதுகளும், தமிழில் முதல் மதிப்பெண் பெற்ற மேல்நிலைப் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மதுரை ஆதீன குருமகா சந்நிதானம் இந்த விருதுகளை வழங்கி, ஆசி கூறினாா்.