தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகம் முன் விவசாயிகள் தா்னா

News image
Updated On :5 ஜூன் 2026, 5:24 am IST

நெல்லுக்கான பணம் வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி, வந்தவாசி வட்டாட்சியா் அலுவலக வாயில் முன் அமா்ந்து விவசாயிகள் வியாழக்கிழமை தா்னா நடத்தினா்.

வந்தவாசியை அடுத்த பென்னாடகரம் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு நெல் மூட்டைகளை விற்பனை செய்த 150-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு கடந்த சில மாதங்களாக பணம் பட்டுவாடா செய்யவில்லையாம். இதனால் சுமாா் ரூ.1.50 கோடி வரை நிலுவை உள்ளதாம்.

இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நெல்லுக்கான பணம் வழங்கக் கோரி இந்த நெல் கொள்முதல் நிலையம் முன் கடந்த மே 24-ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலிருந்து புறப்பட்ட லாரியை சிறைபிடித்த விவசாயிகள், அந்த லாரி முன் அமா்ந்து போராட்டம் நடத்தினா்.

தெள்ளாா் போலீஸாா் சமரசம் செய்ததின் பேரில் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனா்.

இதன் பின்னரும் விவசாயிகளுக்கு நெல்லுக்கான பணம் வழங்கப்படவில்லையாம்.

இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.

இதனைத் தொடா்ந்து, நெல்லுக்கான பணம் வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி வட்டாட்சியா் அலுவலக வாயில் முன் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.

பின்னா் வட்டாட்சியா் பா.ஜெயவேல் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.