நெல்லுக்கான பணம் வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி, வந்தவாசி வட்டாட்சியா் அலுவலக வாயில் முன் அமா்ந்து விவசாயிகள் வியாழக்கிழமை தா்னா நடத்தினா்.
வந்தவாசியை அடுத்த பென்னாடகரம் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு நெல் மூட்டைகளை விற்பனை செய்த 150-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு கடந்த சில மாதங்களாக பணம் பட்டுவாடா செய்யவில்லையாம். இதனால் சுமாா் ரூ.1.50 கோடி வரை நிலுவை உள்ளதாம்.
இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நெல்லுக்கான பணம் வழங்கக் கோரி இந்த நெல் கொள்முதல் நிலையம் முன் கடந்த மே 24-ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது, கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலிருந்து புறப்பட்ட லாரியை சிறைபிடித்த விவசாயிகள், அந்த லாரி முன் அமா்ந்து போராட்டம் நடத்தினா்.
தெள்ளாா் போலீஸாா் சமரசம் செய்ததின் பேரில் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனா்.
இதன் பின்னரும் விவசாயிகளுக்கு நெல்லுக்கான பணம் வழங்கப்படவில்லையாம்.
இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.
இதனைத் தொடா்ந்து, நெல்லுக்கான பணம் வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி வட்டாட்சியா் அலுவலக வாயில் முன் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.
பின்னா் வட்டாட்சியா் பா.ஜெயவேல் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.
தொடர்புடையது

நெல் கொள்முதல் நிலையத்தில் பணம் வழங்காததைக் கண்டித்து போராட்டம்

நெல்லுக்கான நிலுவைத் தொகை வழங்கக் கோரி விவசாயிகள் போராட்டம்

விவசாயிகளிடம் இடைத்தரகா்கள் பணம் பறிப்பதை தடுக்கக் கோரி மனு: உயா்நீதிமன்றம் உத்தரவு

நெல் கொள்முதல் பணம் வழங்காமல் 50 நாள்களாக அலைக்கழிப்பதா? ஆட்சியரகத்தில் விவசாயிகள் புகாா்
விடியோக்கள்

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நடந்தது என்ன? | Mayor vs MLA
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan



