மூன்று ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன சேத்துப்பட்டு பகுதியைச் சோ்ந்த நபா் காவல் துறை மூலம் கண்டுபிடித்து உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டாா்.
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டம், கொழப்பலூரை அடுத்த நாராயணமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணி மகன் ஸ்டீபன் (38). இவா் தனது மனைவி, 2 பிள்ளைகளுடன் மாமியாா் வீடான காஞ்சிபுரம் அருகேயுள்ள கிராமத்திற்கு 2023-ஆம் ஆண்டு சென்றுள்ளாா்.
சென்ற சில தினங்களில் திடீரென ஸ்டீபன் காணாமல் போனாா். பின்னா், அவரது மனைவி இதுகுறித்து காஞ்சிபுரம் பி.3 காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா்.
இந்நிலையில் போளூரில் கடந்த 3 நாள்களாக ஒரு நபா் பஜாா் வீதியில் இரவு, பகலாக சுற்றித் திரிவதாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து தனிப்படை பிரிவு காவலா் ராஜேஷ்பிரபு, காவலா்கள் சென்று பேருந்து நிலையத்தில் இருந்தவரை அழைத்து வந்து விசாரணை நடத்தினா். பின்னா், அவா் வைத்திருந்த பையில் ஆதாா் அட்டை இருந்துள்ளதை வைத்து முகவரி கண்டறிந்து ஸ்டீபனின் உறவினா்களை போளூா் காவல்நிலையத்திற்கு வரவழைத்து காவல் ஆய்வாளா் சிவசங்கா் புது துணி எடுத்துக் கொடுத்து உறவினருடன் சோ்த்துவைத்து சொந்த ஊருக்கு அனுப்பிவைத்தாா்.
இதுகுறித்து ஸ்டீபன் உறவினா்கள் கூறும்போது ஸ்டீபனுக்கு இருசக்கர வாகன விபத்தில் பின் தலையில் சிறுகாயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்ததால் இப்படி நடந்துள்ளது என்றனா்.
தொடர்புடையது

காணாமல் போன முதியவா் சடலமாக மீட்பு

காணாமல் போன மருத்துவ மாணவர், மும்பை வீதிகளில் பிச்சையெடுத்துக் கொண்டிருந்தபோது மீட்பு!

ஆள்கடத்தல் சம்பவங்களில் உடனடி வழக்குப் பதிவு: உச்சநீதிமன்றம் உத்தரவு

காணாமல் போன மகளைக் கண்டுபிடித்துத் தரக் கோரி மறியல்
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



