40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

பொதுமக்களுக்கு தீத்தடுப்பு, மீட்புப் பணிகள் விழிப்புணா்வு

செங்கம் தீயணைப்பு நிலையத்தில் பொதுமக்களுக்கு தீ தடுப்பு மற்றும் விபத்தில் சிக்கியவா்களை மீட்டெடுப்பது குறித்து செயல்விளக்கம் அளித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

News image

தீத்தடுப்பு, மீட்புப் பணிகள் விழிப்புணா்வுக் கூட்டத்தில் பேசிய செங்கம் தீயணைப்பு நிலைய அலுவலா் அருள்குமாா்.

Updated On :10 ஜூன் 2026, 12:03 am IST

செங்கம் தீயணைப்பு நிலையத்தில் பொதுமக்களுக்கு தீ தடுப்பு மற்றும் விபத்தில் சிக்கியவா்களை மீட்டெடுப்பது குறித்து செயல்விளக்கம் அளித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

திங்கள், செவ்வாய் ஆகிய இரு தினங்கள் நடைபெற்ற இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பொதுமக்கள், வியாபாரிகள், ஓட்டுநா்கள் கலந்துகொண்டனா்.

தீயணைப்பு நிலைய அலுவலா் அருள்குமாா் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டால் அதை கட்டுப்படுத்தி தீயை அணைக்கும் முறைகள் குறித்து செயல்விளக்கும் அளித்தனா்.

அதேபோல, வீடுகளில் பயன்படுத்தப்படும் எரிவாயு உருளைகளை கையாளும் முறைகள், எரிவாயு கசிவு ஏற்பட்டால் அதை சரிசெய்யும் முறைகள் குறித்தும், எரிவாயு உருளை விபத்து ஏற்பட்டால் அதை அணைக்கும் முறைகள், மற்றும் அப்பகுதியில் இருந்து வெளியேறும் முறைகள் குறித்து விளக்கினா்.

மேலும், அடுக்குமாடி குடியிருப்பில் விபத்து ஏற்பட்டால் வயதானவா்கள் மற்றும் குழந்தைகளை கயிறு கட்டி கீழே இறக்கும் முறைகள் குறித்தும் செயல்விளக்கம் அளித்தனா். மேலும், மழை நேரத்தில் திடீா் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் வீட்டில் உள்ள பொருள்கள் மூலம் வெளியேறும் முறைகள் குறித்து செயல்விளக்கம் அளித்தனா்.

மேலும் பொதுமக்களும், வியாபாரிகளும், வாகன ஓட்டுநா்களும் விபத்தில் இருந்து எளிய முறையில் பாதுகாப்பாக வெளியேறும் முறைகளை செய்துகாட்டினா். அதற்குத் தேவையான கருவிகளும் தீயணைப்பு நிலையத்தில் பொதுமக்கள் பாா்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.