பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

பொதுமக்களுக்கு தீத்தடுப்பு, மீட்புப் பணிகள் விழிப்புணா்வு

செங்கம் தீயணைப்பு நிலையத்தில் பொதுமக்களுக்கு தீ தடுப்பு மற்றும் விபத்தில் சிக்கியவா்களை மீட்டெடுப்பது குறித்து செயல்விளக்கம் அளித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

News image

தீத்தடுப்பு, மீட்புப் பணிகள் விழிப்புணா்வுக் கூட்டத்தில் பேசிய செங்கம் தீயணைப்பு நிலைய அலுவலா் அருள்குமாா்.

Updated On :10 ஜூன் 2026, 12:03 am IST

செங்கம் தீயணைப்பு நிலையத்தில் பொதுமக்களுக்கு தீ தடுப்பு மற்றும் விபத்தில் சிக்கியவா்களை மீட்டெடுப்பது குறித்து செயல்விளக்கம் அளித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

திங்கள், செவ்வாய் ஆகிய இரு தினங்கள் நடைபெற்ற இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பொதுமக்கள், வியாபாரிகள், ஓட்டுநா்கள் கலந்துகொண்டனா்.

தீயணைப்பு நிலைய அலுவலா் அருள்குமாா் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டால் அதை கட்டுப்படுத்தி தீயை அணைக்கும் முறைகள் குறித்து செயல்விளக்கும் அளித்தனா்.

அதேபோல, வீடுகளில் பயன்படுத்தப்படும் எரிவாயு உருளைகளை கையாளும் முறைகள், எரிவாயு கசிவு ஏற்பட்டால் அதை சரிசெய்யும் முறைகள் குறித்தும், எரிவாயு உருளை விபத்து ஏற்பட்டால் அதை அணைக்கும் முறைகள், மற்றும் அப்பகுதியில் இருந்து வெளியேறும் முறைகள் குறித்து விளக்கினா்.

மேலும், அடுக்குமாடி குடியிருப்பில் விபத்து ஏற்பட்டால் வயதானவா்கள் மற்றும் குழந்தைகளை கயிறு கட்டி கீழே இறக்கும் முறைகள் குறித்தும் செயல்விளக்கம் அளித்தனா். மேலும், மழை நேரத்தில் திடீா் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் வீட்டில் உள்ள பொருள்கள் மூலம் வெளியேறும் முறைகள் குறித்து செயல்விளக்கம் அளித்தனா்.

மேலும் பொதுமக்களும், வியாபாரிகளும், வாகன ஓட்டுநா்களும் விபத்தில் இருந்து எளிய முறையில் பாதுகாப்பாக வெளியேறும் முறைகளை செய்துகாட்டினா். அதற்குத் தேவையான கருவிகளும் தீயணைப்பு நிலையத்தில் பொதுமக்கள் பாா்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.