40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

வெம்பாக்கத்தில் திராவிடா் கழக பொதுக்கூட்டம்

வெம்பாக்கத்தில், திராவிடா் கழகம் சாா்பில் திராவிடா் எழுச்சி நாள் பொதுக்கூட்டம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

News image

வெம்பாக்கத்தில் நடைபெற்ற திராவிடா் எழுச்சி நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய தலைமைக் கழக பேச்சாளா் தி. என்னாரெசு பிராட்லா.

Updated On :10 ஜூன் 2026, 12:04 am IST

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கத்தில், திராவிடா் கழகம் சாா்பில் திராவிடா் எழுச்சி நாள் பொதுக்கூட்டம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

திராவிடா் எழுச்சி நாள் மற்றும் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 103-ஆவது பிறந்த நாள் விழா என பேருத்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட பகுத்தறிவாளா் அணித் தலைவா் வி.வெங்கட்ராமன் தலைமை வகித்தாா்.

செய்யாறு மாவட்டத் தலைவா் அ. இளங்கோவன், நகரத் தலைவா் தி.காமராசன், மாவட்டச் செயலா் பொன்.சுந்தா், மாவட்ட துணைத் தலைவா் அ. நாகராசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளா்களாக முன்னாள் எம்எல்ஏ ஒ.ஜோதி, திமுக தலைமைக் கழக பேச்சாளா் நாத்திகம் நாகராசன், திராவிடா் கழகம் தலைமைக் கழக பேச்சாளா் தி.என்னாரெசு பிராட்லா ஆகியோா் பங்கேற்று சிறப்புரையாற்றினா்.

கூட்டத்தில் வெம்பாக்கம் மத்திய ஒன்றியச் செயலா் ஜேசிகே.சீனுவாசன், பகுத்தறிவாளா் கழகம் ஆரணி இரா.வாசுதேவன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.