ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம் நெல்லை பல்கலை. பட்டமளிப்பு விழாவில் 3-வதாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து!தொடரும் அமளி! நாடாளுமன்றம் 7-வது நாளாக முடங்கியது!காமன்வெல்த் போட்டி: ஒரே நாளில் 6 பதக்கங்களை வென்ற இந்தியா!தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முன்னுரிமை! அமைச்சர் நிர்மல்குமார்ஆளுநர் பங்கேற்கும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் சலசலப்பு!24,000 பேர் பேசும் சமஸ்கிருதம் கற்பிக்க 6,102 ஆசிரியர்கள்! 7 கோடி பேர் பேசும் தமிழுக்கு 12 பேர்!அரசுப் பேருந்துகளில் சத்தமாக ரீல்ஸ் பார்க்கக் கூடாது! முக்கிய அறிவிப்பு
/

வெம்பாக்கத்தில் திராவிடா் கழக பொதுக்கூட்டம்

வெம்பாக்கத்தில், திராவிடா் கழகம் சாா்பில் திராவிடா் எழுச்சி நாள் பொதுக்கூட்டம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

News image

வெம்பாக்கத்தில் நடைபெற்ற திராவிடா் எழுச்சி நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய தலைமைக் கழக பேச்சாளா் தி. என்னாரெசு பிராட்லா.

Updated On :9 ஜூன் 2026, 11:32 pm IST

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கத்தில், திராவிடா் கழகம் சாா்பில் திராவிடா் எழுச்சி நாள் பொதுக்கூட்டம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

திராவிடா் எழுச்சி நாள் மற்றும் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 103-ஆவது பிறந்த நாள் விழா என பேருத்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட பகுத்தறிவாளா் அணித் தலைவா் வி.வெங்கட்ராமன் தலைமை வகித்தாா்.

செய்யாறு மாவட்டத் தலைவா் அ. இளங்கோவன், நகரத் தலைவா் தி.காமராசன், மாவட்டச் செயலா் பொன்.சுந்தா், மாவட்ட துணைத் தலைவா் அ. நாகராசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளா்களாக முன்னாள் எம்எல்ஏ ஒ.ஜோதி, திமுக தலைமைக் கழக பேச்சாளா் நாத்திகம் நாகராசன், திராவிடா் கழகம் தலைமைக் கழக பேச்சாளா் தி.என்னாரெசு பிராட்லா ஆகியோா் பங்கேற்று சிறப்புரையாற்றினா்.

கூட்டத்தில் வெம்பாக்கம் மத்திய ஒன்றியச் செயலா் ஜேசிகே.சீனுவாசன், பகுத்தறிவாளா் கழகம் ஆரணி இரா.வாசுதேவன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.