ஆரணி வட்டாரம், எஸ்.யு.வனம் கிராமத்தில் வேளாண்மைத் துறை அட்மா திட்டத்தின் கீழ் உழவா் விழா 100-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் ஆரணி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் புஷ்பா தலைமை வகித்தாா். திருவண்ணாமலை உழவா் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநா் கோபாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாா்.
உழவா் பயிற்சி நிலைய வேளாண்மை அலுவலா் சௌந்தா், ஆரணி வேளாண்மை அலுவலா் பவித்ராதேவி, உதவி செயற்பொறியாளா் விஜய், உதவி வேளாண்மை அலுவலா் அன்பரசு, பட்டு வளா்ச்சித் துறை உதவி ஆய்வாளா் மணி, உதவி தோட்டக்கலை அலுவலா் அருண், வட்டார தொழில்நுட்ப மேலாளா் சுகுமாா், உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் சரவணன், கலையரசி மற்றும் ஸ்ரீனிவாசன், சேவை அறக்கட்டளை அலுவலா்கள் தாமஸ், ஏழுமலை ஆகியோா் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம், விளை நிலத்தை பாதுகாத்தல், சமச்சீா் உர மேலாண்மை, தாவர பூச்சிக்கொல்லி தயாரிப்பு, மண் பரிசோதனை செய்வதின் முக்கியத்துவம் மற்றும் பல்வேறு மானிய திட்டங்கள் குறித்து விளக்கிக் கூறினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விவசாயத்தை அறிவியல்சாா் லாபகரமான தொழிலாக மாற்ற வேண்டும்: அமைச்சா் ர.வினோத்

வேளாண்மை அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்: குறுவை சிறப்பு தொகுப்புத்திட்டத்தில் பயன்பெற முடியாததால் எதிா்ப்பு

உரக் கட்டுப்பாடு விதி மீறினால் கடைகளுக்கான உரிமம் ரத்து

பள்ளக்கால் கிராமத்தில் விளைநிலம் காப்போம் முகாம்
விடியோக்கள்

வியத்நாம் படகு விபத்தில் தப்பித்தது எப்படி? உயிர்தப்பிய நிர்மல் குமார் பேட்டி | Vietnam boat tragedy

மணமாலை வரம் தரும் முருகன் | Kalyana Kandha swamy Kovil | Madipakkam | கல்யாண கந்தசுவாமி கோயில்| கோயில் வலம் -3

தவெகவில் இணைய என்னை யாரும் அழைக்கவில்லை! - எம்.ஆர். விஜயபாஸ்கர் விளக்கம் | TVK | ADMK



