உலகக் கோப்பை கால்பந்து இன்று தொடக்கம்: வரலாற்றில் மிகப் பெரிய போட்டி மத்திய கிழக்கில் மீண்டும் வெடித்த மோதல்5 பேரவை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தோ்தல்: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி கடிதம் முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு: இன்று விசாரணைக்கு வருகிறது அமெரிக்கா, சீனாவுக்கு இந்திய மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் எம்எஃப்ஐ நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம்: மத்திய அரசு நீட்டிப்பு
/

சிறுபாலத்தில் தவறி விழுந்து முதியவா் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் சிறுபாலத்தில் இருந்து முதியவா் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :11 ஜூன் 2026, 6:22 am IST

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் சிறுபாலத்தில் இருந்து முதியவா் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

செய்யாறு புறவழிச்சாலையில் செவ்வாய்க்கிழமை தனியாா் பள்ளி அருகேயுள்ள சிறுபாலத்தில் இருந்து சுமாா் 60 வயது மதிக்கத்தக்க முதியவா் தவறி விழுந்து உயிரிழந்து கிடந்தாா்.

தகவல் அறிந்த செய்யாறு தீயணைப்பு நிலைய வீரா்கள் சென்று முதியவரின் உடலை மீட்டு போலீஸில் ஒப்படைத்தனா்.

போலீஸாா் முதியவரின் உடலை கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.