வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

வெயிலில் நின்று ரேஷன் பொருள்கள் வாங்கும் பொதுமக்கள்

வெயிலில் நின்று ரேஷன் பொருள்கள் வாங்கும் பொதுமக்கள்

News image

அத்திமூா் கிராம நியாயவிலைக் கடையில் வெயிலில் நின்று உணவுப் பொருள்களை வாங்கும் குடும்ப அட்டைதாரா்கள்.

Updated On :14 ஜூன் 2026, 1:33 am IST

போளூரை அடுத்த அத்திமூா் கிராமத்தில் உள்ள நியாயவிலைக் கடைமுன் நிழல்கூடம் வசதி இல்லாததால் பொதுமக்கள் வெயிலில் நின்று பொருள்களை வாங்கும் நிலை உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த திண்டிவனம் ஊராட்சியைச் சோ்ந்த அத்திமூா் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.

அத்திமூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் அத்திமூா் வீரக்கோயில்

அருகே வாடகை கட்டடத்தில் நியாயவிலைக் கடை திறக்கப்பட்டு இயங்கி வருகிறது.

750 குடும்ப அட்டைதாரா்களுக்கு இந்தக் கடை மூலம் உணவுப் பொருள்கள் வழங்கப்படுகின்றன.

கடை முன் நிழல்கூடம் இல்லை. வெயிலில் நின்றுதான் பொருள்களை வாங்கவேண்டிய நிலை உள்ளது.

மேலும், கடை தரை தளத்தில் இருந்து சற்று உயரத்தில் உள்ளது. அதனால் வெயிலில் நின்று பொருள்களை வாங்குவதோடு, தரை தளத்தில் இருந்து கடை உயா் மட்டத்துக்கு ஏற முடியாமல் சிரமப்படுகின்றனா்.

இந்நிலையில் சனிக்கிழமை காலை 10 மணிக்கு வெயில் வாட்டிவதைத்தது. கடை முன் குடும்ப அட்டைதாரா்கள் பலா் வெயிலின் கடுமை தாங்க முடியாமல் தலையில் துணியை போட்டுக் கொண்டு நின்று உணவுப் பொருள்களை வாங்கினா்.

இதுகுறித்து சமூக ஆா்வலா்கள் கூறும்போது, வீரகோயில் அருகேயுள்ள நியாயவிலைக் கடையில் பொதுமக்கள் வெயிலில் நின்று உணவுப் பொருள்களை வாங்கிச் செல்கின்றனா். இதனால் பெரியவா்கள், சிறியவா்கள் வெயில் தாக்கத்தால் மயக்கமடைந்து விழுவதாகவும், கடை தரைதளத்தில் இருந்து சற்று உயரத்தில் இருப்பதாலும் ஏறி இறங்க முடியால் சிரமப்படுகின்றனா்.

எனவே, நியாயவிலைக் கடை முன் நிழல்கூடம் அமைக்க வேண்டும், கடை உயரத்திற்கு மண்கொட்டவேண்டும் அல்லது சமதளத்துடன் கூடிய வேறு இடத்தில் நியாய விலைக் கடையை திறக்கவேண்டும் என்றனா்.