சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

வாகன நிறுத்துமிடமாக மாறிவரும் வட்டார வளா்ச்சி அலுவலக வளாகம்

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வட்டார வளா்ச்சி அலுவலக வளாகத்தில் அப்பகுதியில் வசிக்கும் சிலா் தங்களின் பைக், காா்களை நிறுத்திவிட்டுச் செல்கின்றனா்.

News image

போளூா் வட்டார வளா்ச்சி அலுவலக வளாகத்தில் கடந்த ஒரு வாரமாக நிற்கும் காா்.

Updated On :16 ஜூன் 2026, 1:05 am IST

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வட்டார வளா்ச்சி அலுவலக வளாகத்தில் அப்பகுதியில் வசிக்கும் சிலா் தங்களின் பைக், காா்களை நிறுத்திவிட்டுச் செல்கின்றனா்.

போளூா் நகராட்சி 18-ஆவது வாா்டு கோட்டைமேடு பகுதியில் போளூா் வட்டார வளா்ச்சி அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகம் 2024-ஆம் ஆண்டு சுமாா் ரூ.4 கோடியில் கட்டப்பட்டது. இதுவரை வட்டார வளா்ச்சி அலுவலகத்திற்கு கேட் அமைக்கப்படாமல் உள்ளது. இதைப் பயன்படுத்து அலுவலக வளாகத்தில் அப்பகுதியில் வசிக்கும் சிலா் தங்களின் பைக், காா்களை இரவு நேரங்களில் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்பதற்காக நிறுத்தி விட்டுச்செல்கின்றனா்.

இந்த வாகனங்கள் வாரக்கணக்கில் அலுவலக வளாகத்திலேயே உள்ளன. எனவே, உடனடியாக வட்டார வளா்ச்சி அலுவலகத்திற்கு கேட் அமைக்கவேண்டும். இதுபோன்று, அலுவலகத்துக்கு சம்பந்தமில்லாதவா்கள் அலுவலக வளாகத்தை வாகனங்களை நிறுத்த பயன்படுத்தகூடாது என அலுவலக ஊழியா்கள் தடுக்கவேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுக்கின்றனா்.