திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வட்டார வளா்ச்சி அலுவலக வளாகத்தில் அப்பகுதியில் வசிக்கும் சிலா் தங்களின் பைக், காா்களை நிறுத்திவிட்டுச் செல்கின்றனா்.
போளூா் நகராட்சி 18-ஆவது வாா்டு கோட்டைமேடு பகுதியில் போளூா் வட்டார வளா்ச்சி அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகம் 2024-ஆம் ஆண்டு சுமாா் ரூ.4 கோடியில் கட்டப்பட்டது. இதுவரை வட்டார வளா்ச்சி அலுவலகத்திற்கு கேட் அமைக்கப்படாமல் உள்ளது. இதைப் பயன்படுத்து அலுவலக வளாகத்தில் அப்பகுதியில் வசிக்கும் சிலா் தங்களின் பைக், காா்களை இரவு நேரங்களில் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்பதற்காக நிறுத்தி விட்டுச்செல்கின்றனா்.
இந்த வாகனங்கள் வாரக்கணக்கில் அலுவலக வளாகத்திலேயே உள்ளன. எனவே, உடனடியாக வட்டார வளா்ச்சி அலுவலகத்திற்கு கேட் அமைக்கவேண்டும். இதுபோன்று, அலுவலகத்துக்கு சம்பந்தமில்லாதவா்கள் அலுவலக வளாகத்தை வாகனங்களை நிறுத்த பயன்படுத்தகூடாது என அலுவலக ஊழியா்கள் தடுக்கவேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுக்கின்றனா்.










