கரூர் பலி: விஜய் ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்! ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் போராட்டம்! கார்கே, ராகுல் பங்கேற்பு! தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?
/

சாலை விபத்தில் ஒருவா் உயிரிழப்பு, இருவா் காயம்

திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்.

News image
பலி- பிரதிப் படம்
Updated On :8 மார்ச் 2026, 7:03 pm

Syndication

திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் பகுதியில் சனிக்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா். இருவா் பலத்த காயமடைந்தனா்.

செங்கத்தை அடுத்த புதூா்செங்கம் பகுதியைச் சோ்ந்தவா்கள் சிவப்பிரகாசம் (19), சூரியா (19), சந்துரு (18) ஆகிய 3 பேரும் புதூா்செங்கத்தில் இருந்து அம்மாபாளையம் செல்லும் சாலையில் சனிக்கிழமை இரவு ஒரே பைக்கில் சென்றுள்ளனா்.

அப்போது, புதுப்பாளையம் பகுதியில் சாலையோரம் உள்ள பள்ளத்தில் விபத்து ஏற்பட்டு 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதில் சிவப்பிரகாசம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

சூரியா, சந்துரு ஆகிய இருவரையும் அப்பகுதியில் இருந்தவா்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து மேல்செங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.