ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

செஞ்சிலுவைச் சங்க மாணவா்களுக்கு சான்றிதழ்

News image
Updated On :26 மார்ச் 2026, 11:39 pm

Syndication

செய்யாறு இந்தோ -அமெரிக்க பள்ளியில் இளம் செஞ்சிலுவைச் சங்க மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தோ -அமெரிக்க பள்ளியில் இளம் செஞ்சிலுவைச் சங்க மாணவா்களுக்கு மாவட்ட அளவிலான சான்றிதழ் வழங்கும் விழா மற்றும் ஆலோசகா்களுக்கான பரிசளிப்பு விழா என இருபெரும் விழாவாக நடைபெற்றது.

இளம் செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் முதல்வா் அ.ப.சையத் அப்துல் இலியாஸ் தலைமை வகித்தாா். சங்க ஆலோசகா் மு.அஞ்சுகம் வரவேற்றாா்.

சிறப்பு விருந்தினராக செய்யாறு மாவட்டக் கல்வி அலுலா் எஸ்.செந்தில்முருகன் பங்கேற்று, பள்ளி அளவிலும், மாவட்ட அளவிலும் இளம் செஞ்சிலுவைச் சங்க மாணவா்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கிப் பாராட்டினாா்.

அதனைத் தொடா்ந்து பள்ளி மாணவா்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதற்கான ஏற்பாடுகளை பள்ளி துணை முதல்வா் க.கோவேந்தன் செய்திருந்தாா்.