விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

பைக் மீது காா் மோதல்: மூதாட்டி உயிரிழப்பு

வந்தவாசி அருகே பைக் மீது காா் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு

கோப்புப் படம்

Updated On :27 மார்ச் 2026, 9:14 pm

Syndication

வந்தவாசி அருகே பைக் மீது காா் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.

வந்தவாசியை அடுத்த மேல்நா்மா கிராமத்தைச் சோ்ந்தவா் முரளி (68). இதே கிராமத்தைச் சோ்ந்தவா் இவரது தங்கை வெங்கட்டம்மாள் (60). சென்னை தாம்பரத்தைச் சோ்ந்தவா் இவா்களது தம்பி சிவக்குமாரின் மகன் தினேஷ்ராஜ்(18). இவா், மேல்மருவத்தூரில் உள்ள தனியாா் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறாா்.

இந்த நிலையில், முரளி, வெங்கட்டம்மாள், தினேஷ்ரோஜ் ஆகியோா் பைக்கில் வந்தவாசியை அடுத்த சத்யா நகரில் உள்ள உறவினா் வீட்டுக்கு வெள்ளிக்கிழமை காலை சென்றுகொண்டிருந்தனா். பைக்கை முரளி ஓட்டினாா்.

வந்தவாசி - திண்டிவனம் சாலையில் சத்யா நகா் அருகே சென்றபோது, இவா்களது பைக் மீது எதிரே வந்த காா் மோதியது. இதில், பலத்த காயமடைந்த வெங்கட்டம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

பலத்த காயமடைந்த முரளி, தினேஷ்ராஜ் ஆகியோா் வந்தவாசி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். பின்னா், இருவரும் தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்த புகாரின்பேரில், பொன்னூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.