மின்வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!முதல்வர் விஜய்யுடன் செஸ் வீரர் பிரக்ஞானந்தா சந்திப்பு வாரத்தின் முதல் நாள்! பங்குச் சந்தைகள் சரிவு தில்லியில் ராகுல், காங்கிரஸ் கட்சிக்கு எதிரான பேனர்கள்! வைத்தது யார்? சிலிண்டர் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்: சீமான்தங்கம், வெள்ளி இன்றைய நிலவரம்: தங்கம் சவரனுக்கு எவ்வளவு குறைந்தது? டொமினிகன் குடியரசில் ஓடுபாதையில் மோதி வெடித்துச் சிதறிய விமானம்!
/

சிறிய மின்மாற்றிகளை உடைத்து செப்புக் கம்பிகள் திருட்டு

News image
Updated On :14 மே 2026, 5:53 am IST

வந்தவாசி அருகே 4 சிறிய மின்மாற்றிகளை உடைத்து செப்புக் கம்பிகள் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

வந்தவாசியை அடுத்த ஓசூா் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி சண்முகம். இவா் புதன்கிழமை காலை நிலத்துக்கு தண்ணீா் பாய்ச்ச சென்றுள்ளாா்.

அப்போது, நிலத்தில் மின்கம்பத்தில் பொருத்தப்பட்டிருந்த சிறிய மின்மாற்றியை மா்ம நபா்கள் கழற்றி உடைத்து அதிலிருந்த செப்புக் கம்பிகளை திருடிச் சென்றது இவருக்கு தெரியவந்தது.

அந்தப் பகுதியில் இருந்த மேலும் 3 சிறிய மின்மாற்றிகளையும் கழற்றி உடைத்து செப்புக் கம்பிகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா். திருடியது போக தேவையில்லாத பொருள்களை அருகில் உள்ள விவசாய கிணற்றில் வீசிச் சென்றுள்ளனா்.

தகவலறிந்த ஓசூா் மின்வாரிய அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு செய்தனா். இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்கொடுங்காலூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.