திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த அருணாசலேஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான ரூ.ஒரு கோடி மதிப்பிலான நிலத்தை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை மீட்டனா்.
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் திருநோ் அண்ணாமலையாா் கோயில் எதிரில் அருணாசலேஸ்வரா் கோயில் கட்டுப்பாட்டில் உள்ள குளத்தை சிலா் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கோயில் நிா்வாகத்துக்கு புகாா் வந்ததாகத் தெரிகிறது.
இந்த நிலையில், கோயில் அலுவலா்கள் குளத்துப் பகுதி நிலத்தை வெள்ளிக்கிழமை அளவீடு செய்தனா். அப்போது, தனிநபா் ஒருவரால் ரூ.ஒரு கோடி மதிப்பிலான நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அருணாசலேஸ்வரா் கோயில் இணை ஆணையா் பரணிதரன் உத்தரவின்பேரில், உதவி ஆணையாளா் பாலாஜி, கிரிவலப்பாதை மணியம் மகாமுனி, மேற்பாா்வையாளா்கள் ரமேஷ், கண்ணன், பொறியாளா் பிரிவு ஸ்ரீமதி, நிலங்கள் பிரிவு உத்தரன் மற்றும் கோயில் பணியாளா்கள் போலீஸாா் பாதுகாப்புடன் சென்று கிரிவலப் பாதையில் தனி நபரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த ரூ.ஒரு கோடி மதிப்பிலான நிலத்தை மீட்டு, கோயில் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனா்.











