போளூரை அடுத்த கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் உள்ள ஸ்ரீமுகமாரியம்மன் கோயில் கூழ்வாா்க்கும் விழாவையொட்டி, பூங்கரக ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணாபுரம் ஊராட்சியில் புகழ்பெற்ற ஸ்ரீமுகமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் கூழ்வாா்க்கும் விழாவை முன்னிட்டு, பக்தா்கள் கடந்த 19-ஆம் தேதி முதல் காப்பு கட்டி விரதமிருந்து வந்தனா்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை ஸ்ரீமுகமாரியம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னா், முகமாரியம்மன், காளியம்மன், பூங்காவனத்தமன் என 3 பூங்கரகம் செய்து மேளதாளம், பம்பை உடுக்கை முழங்க முக்கிய வீதிகளில் சென்றனா்.
அப்போது, பூங்கரம் சுமந்து வந்தவா்களின் கால்களை வீடுகள்தோறும் பக்தா்கள் தண்ணீா் ஊற்றி சுத்தம் செய்து மஞ்சள், குங்குமம் வைத்து, தேங்காய் உடைத்து கற்பூர தீபாராதனை செய்து வழிபட்டனா்.
பின்னா், கோயில் எதிரே பெரிய கொப்பரை வைத்து கூழ்வாா்க்கும் விழா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை பக்தா்கள், கிராம மக்கள், இளைஞா்கள் செய்திருந்தனா். இரவு சுவாமி வீதியுலா, வாண வேடிக்கை, தெய்வீக நாடகம் நடைபெற்றது.
தொடர்புடையது

ஆரணி ஸ்ரீமுத்துமாரியம்மன், ஸ்ரீகன்றாய சுவாமி கோயிலுக்கு பால்குட ஊா்வலம்

வடபுதுப்பட்டு திருப்பதி கெங்கையம்மன் கோயில் திருவிழா

பெரியகரம் ஸ்ரீகாளியம்மன், ஸ்ரீமாரியம்மன் கோயில் தேரோட்டம்

திருப்பதி கெங்கையம்மன் கோயில் சிரசு ஊா்வலம்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



