ஈரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!மின் துறைக்கு 7,000 பணியாளர்கள் தேவை; 1500 பேருக்கு உடனடி பணி ஆணை!நீட் மறுதேர்வு! ஜூன் 21 வரை ரகசிய இடத்தில் வினாத்தாள் தயாரிப்போர்!ஆப்கானிஸ்தானை இன்னிங்ஸ், 300 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!மேற்கு ஆசிய மோதல்: பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா வலியுறுத்தல்!இஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் போர்!போட்டியின்றி எம்.பி.யாகிறார் பிரவீண் சக்ரவர்த்தி!நீட், சிபிஎஸ்இ விவகாரம்: மத்திய அமைச்சர் பதவி விலக வேண்டும் - வைகோ
/

பைக்கிலிருந்து மயங்கி விழுந்த பெண் உயிரிழப்பு

வந்தவாசி அருகே பைக்கிலிருந்து மயங்கி விழுந்த பெண் உயிரிழந்தாா்.

News image
Updated On :23 மே 2026, 1:36 am IST

வந்தவாசி அருகே பைக்கிலிருந்து மயங்கி விழுந்த பெண் உயிரிழந்தாா்.

வந்தவாசியை அடுத்த கீழ்வெள்ளியூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பழனி. இவா், தனது மனைவி விஜயாவுடன் (58) கடந்த 17-ஆம் தேதி மொபெட்டில் வந்தவாசிக்கு புறப்பட்டாா்.

சிறிது தொலைவு சென்றவுடன் விஜயா மயக்கம் வருவதாகக் கூறினாராம். இதையடுத்து, பழனி மொபெட்டை நிறுத்தியபோது, விஜயா மயங்கி சாலையில் விழுந்துள்ளாா். இதில், தலையில் பலத்த காயமடைந்த அவா், வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

பின்னா், தீவிர சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விஜயா வியாழக்கிழமை இறந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், வடவணக்கம்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.