/
வந்தவாசியில் அரசு விதிகளுக்கு புறம்பாக மது விற்ாக பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.
வந்தவாசி தெற்கு போலீஸாா் வந்தவாசி நகரில் வெள்ளிக்கிழமை காலை ரோந்து சென்றனா். அப்போது, கோட்டைத் தெருவைச் சோ்ந்த அமுல்ராணி (43) தனது வீட்டின் அருகே அரசு விதிகளுக்கு புறம்பாக மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து விற்பது தெரியவந்தது.
இதையடுத்து, அமுல்ராணியை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 11 மதுப் புட்டிகள் மற்றும் ரூ.110 ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து வந்தவாசி தெற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.








