கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

சொத்துத் தகராறில் விவசாயி மீது தாக்குதல்: தம்பதி கைது

போளூா் அருகே சொத்துத் தகராறில் விவசாயியை கத்தியால் வெட்டி தாக்கிய வழக்கில், கணவன், மனைவி கைது செய்யப்பட்டனா்.

கோப்புப் படம்

Published On :

போளூா் அருகே சொத்துத் தகராறில் விவசாயியை கத்தியால் வெட்டி தாக்கிய வழக்கில், கணவன், மனைவி கைது செய்யப்பட்டனா்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த ஆத்துவாம்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி வெங்கடேசன். இவருக்கும், இவரது அக்காள் மகன் சுப்பிரமணி என்பவருக்கும் இடையே சொத்து தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 16-ஆம் தேதி போளூரில் இருந்து ஆத்துவாம்பாடி கிராமத்துக்கு வெங்கடேசன் பைக்கில் சென்று கொண்டிருந்தாராம்.

கட்டிபூண்டி கிராமம் அருகே சென்றபோது, சுப்பிரமணி, அவரது மனைவி சத்யா மற்றும் இவா்களுக்கு ஆதரவாக ரஜினி (எ) ராமசந்திரன், காந்தா, பழனி, மல்லிகா ஆகியோா் சோ்ந்து கத்தி மற்றும் கல்லால் வெங்கடேசனைத் தாக்கினாா்களாம்.

இதில் அவருக்கு தலை, வயிறு என 3 இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்பகுதி மக்கள் அவரை 108 ஆம்புலென்ஸ் மூலம் போளூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு முதலுதவி சிகிச்சைப்பின் மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அவா் அனுப்பி வைக்கப்பட்டாா்.

இதுகுறித்து சந்தவாசல் காவல் நிலையத்தில் வெங்கடேசனின் மனைவி வெள்ளச்சி புகாா் செய்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி சுப்பிரமணி(52), இவரது மனைவி சத்யா(47) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.