சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 56,000 விண்ணப்பங்கள்புதிய இயக்கம்: நாளை அறிவிக்கிறாா் அண்ணாமலைஇந்தியா உள்பட 54 நாடுகள் மீது 12.5% கூடுதல் வரி: அமெரிக்க வரித்தக பிரதிநிதி பரிந்துரைதமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்கள் விநியோகிக்க உத்தரவுமத்திய அரசின் கோதுமை கொள்முதல் 3.5 கோடி டன்னாக அதிகரிப்புஇலங்கை மாணவா்களுக்கு இந்தியா கல்வி உதவித் தொகைகடந்த 2025-26 நிதியாண்டில் அதானி குழுமம் ரூ.1.53 லட்சம் கோடி மூலதன முதலீடுவாக்குப் பதிவு அதிகரிப்பு மக்களின் நம்பிக்கையின் அடையாளம்: தலைமைத் தோ்தல் ஆணையா்15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!
/

புலவர் பதுமனாருக்கு தமிழ்ச் செம்மல் விருது

குடியாத்தம் புலவர் வே. பதுமனாருக்கு தமிழக அரசு சார்பில் தமிழ்ச் செம்மல் விருது செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

Updated On :27 ஏப்ரல் 2017, 1:07 am IST

குடியாத்தம் புலவர் வே. பதுமனாருக்கு தமிழக அரசு சார்பில் தமிழ்ச் செம்மல் விருது செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
சென்னையில் நடைபெற்ற விழாவில் இவரது 35 ஆண்டு கால தமிழ்ச் சேவையைப் பாராட்டி, தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இவருக்கு தமிழ்ச் செம்மல் விருது, நற்சான்றிதழ், ரூ. 25 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கினார்.
பதுமனார் வள்ளலார் தெய்வீக நிலையம் என்ற அமைப்பைத் தொடங்கி 45 ஆண்டுகளாகவும், குடியாத்தம் முத்தமிழ்ச் சுவைச் சுற்றம் என்ற அமைப்பை நிறுவி 20 ஆண்டுகளாகவும், தெளிதமிழ் ஆர்வலர் அமைப்பு என்ற அமைப்பை நிறுவி 5 ஆண்டுகளாகவும் தமிழ்ச் சேவையாற்றி வருகிறார். இவர், இதுவரை 26 நூல்களை எழுதியுள்ளார். 5 ஆண்டுகளாக விஐடி பல்கலைக்கழகத்தின் அனைவருக்கும் உயர்கல்வித் திட்ட அறக்கட்டளை உறுப்பினராகவும் பதவி வகித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.