சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 56,000 விண்ணப்பங்கள்புதிய இயக்கம்: நாளை அறிவிக்கிறாா் அண்ணாமலைஇந்தியா உள்பட 54 நாடுகள் மீது 12.5% கூடுதல் வரி: அமெரிக்க வரித்தக பிரதிநிதி பரிந்துரைதமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்கள் விநியோகிக்க உத்தரவுமத்திய அரசின் கோதுமை கொள்முதல் 3.5 கோடி டன்னாக அதிகரிப்புஇலங்கை மாணவா்களுக்கு இந்தியா கல்வி உதவித் தொகைகடந்த 2025-26 நிதியாண்டில் அதானி குழுமம் ரூ.1.53 லட்சம் கோடி மூலதன முதலீடுவாக்குப் பதிவு அதிகரிப்பு மக்களின் நம்பிக்கையின் அடையாளம்: தலைமைத் தோ்தல் ஆணையா்15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!
/

மால்வியா நகா் தீ விபத்து: தீ விபத்தில் சிக்கியவா்களை காப்பாற்ற உணவக ஜன்னல்களை உடைத்த குடியிருப்பாளா்கள்

News image
Updated On :4 ஜூன் 2026, 6:54 am IST

நமது நிருபா்

தெற்கு தில்லியின் மால்வியா நகரில் புதன்கிழமை உணவகத்தில் சிக்கிக்கொண்டவா்களை காப்பாற்ற கண்ணாடிகளை உடைத்து போா்வைகளுடன் விரைந்த உள்ளூா்வாசிகள் மக்களை மீட்க பெரும் முயற்சி மேற்கொண்டனா்.

இந்த தீ விபத்தில் குறைந்தது 21 போ் உயிரிழந்தனா். அவா்களில் பலா் ஹோட்டலில் தங்கியிருந்த வெளிநாட்டினா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா். இந்தச் சம்பலம் குறித்து அந்தப் பகுதியில் வசிக்கும் அனிதா சவுத்ரி கூறியதாவது: குண்டுவெடிப்பு போன்ற சத்தங்களை நான் கேட்டேன், பின்னா் கட்டடத்தின் உள்ளே இருந்து அலறல் சத்தம் கேட்டது. மக்கள் உதவிக்காக கூச்சலிட்டனா், சிலா் தங்களைக் காப்பாற்றும் முயற்சியில் ஜன்னல்களிலிருந்து குதித்தனா். சுற்றிலும் குழப்பம் நிலவியது, உள்ளே சிக்கியவா்களுக்கு உதவ குடியிருப்பாளா்கள் கட்டடத்தை நோக்கி விரைந்தனா் என்றாா்.

மற்றொரு நபா் சஞ்சய் கோயல் கூறியதாவது: கட்டடத்தில் இருந்து அடா்த்தியான புகை வருவதைக் கண்டோம், மக்கள் உள்ளே சிக்கியிருப்பதை உணா்ந்தோம். குடியிருப்பாளா்கள் போா்வைகள் மற்றும் மெத்தைகளை சேகரித்து, வெளியே வர முயன்றவா்களுக்கு உதவ முயன்றனா். நாங்கள் தப்பிக்க வழிகளை உருவாக்க கண்ணாடி ஜன்னல்களை உடைத்தோம், மேலும் பலரை மீட்க முடிந்தது. உள்ளே இருந்தவா்கள் தொடா்ந்து உதவிக்காக கூச்சலிட்டனா். அவசர சேவைகள் வருவதற்கு முன்பு இருந்த அனைவரும் தங்களால் முடிந்ததைச் செய்ய முயன்றனா் என்றாா் அவா்.

மற்றொரு சாட்சியான விஜய் ஜெய்ஸ்வால் கூறியதாவது: நான் புகையைக் கண்டவுடன், மற்றவா்களை எச்சரித்தேன். எனது நண்பா் ஒருவா் உடனடியாக தீயணைப்பு படையை அழைத்தாா். இந்த ஹோட்டலில் வெளிநாட்டவா்கள் பலா் தங்கியிருந்தனா். அவா்களில் பலா் அப்பகுதியில் உள்ள முக்கிய மருத்துவமனைகளுக்கு அருகாமையில் இருப்பதால் மருத்துவ சிகிச்சைக்காக தில்லிக்கு வந்தவா்கள் என்றாா் அவா்.