தெற்கு தில்லியின் மால்வியா நகா் பகுதியில் உள்ள ஹோஸ் ராணி பகுதியில், கத்தி மற்றும் தடிகளுடன் வந்த கும்பல் ஒன்று இரண்டு சகோதரா்களைத் தாக்கியதாக காவல் துறை வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.
தாக்குதலுக்கான காரணமாக நீண்ட காலத் தனிப்பட்ட விரோதம் இருக்கலாம் என்று காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் வியாழக்கிழமை இரவு நடைபெற்ாகக் காவல் துறையினா் தெரிவித்தனா். தாக்குதலுக்குள்ளானவா்களின் தலை மற்றும் கை, கால்களில் காயங்கள் ஏற்பட்டன.
அவா்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்ற பிறகு விடுவிக்கப்பட்டனா் என்றும் அந்த வட்டாரங்கள் கூறின.
புகாரின் அடிப்படையில், மால்வியா நகா் காவல் துறையினா் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பொறியாளா் மீது தாக்குதல்: சகோதரா்கள் இருவா் மீது வழக்கு

தில்லியில் 6 ஆண்டுகளில் தீ விபத்துகளால் 543 போ் உயிரிழப்பு: புள்ளிவிவரத் தகவல்

மால்வியா நகரில் 12 வணிக வளாகங்களின் உரிமங்களை ரத்து செய்யக் கோரி சுற்றுலாத் துரைக்கு எம்சிடி கடிதம்







