ஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்முதல்வர் கோட் போடுவது பிரச்னையில்லை; கோட்டை விடுவதே பிரச்னை! உதயநிதிமுதல்வர் விஜய்யுடன் துரை வைகோ சந்திப்பு! திருச்சிக்கு மெட்ரோ அறிவிக்க கோரிக்கை எனத் தகவல்தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதிக்கவில்லை: மேயர் பிரியா விளக்கம்!கரப்பான்பூச்சி கட்சியின் பின்புலத்தில் நக்ஸல்கள்: பாஜககர்நாடக அமைச்சரவையில் பெண்களுக்கு இடமில்லையா? டி.கே. சிவகுமார் பதில்!தவெக ஆட்சியிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: பாஜக
/

மால்வியா நகரில் 12 வணிக வளாகங்களின் உரிமங்களை ரத்து செய்யக் கோரி சுற்றுலாத் துரைக்கு எம்சிடி கடிதம்

News image
Updated On :5 ஜூன் 2026, 2:58 am IST

தெற்கு தில்லியின் மால்வியா நகரில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடா்ந்து, அங்கு விதிமுறைகளை மீறி செயல்பட்ட 12 ஹோட்டல்களின் உரிமங்களை ரத்து செய்யக் கோரி சுற்றுலாத் துறைக்கு தில்லி மாநகராட்சி வியாழக்கிழமை கடிதம் எழுதியுள்ளது.

இதுகுறித்து தில்லி மாநகராட்சியின் மூத்த அதிகாரி ஒருவா் கூறியதாவது: தீ விபத்து நிகழ்ந்த ஹௌஸ் ராணி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உரிமம் பெற்ற 12 ஹோட்டல் வளாகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றின் உரிமங்களை ரத்து செய்ய சுற்றுலாத்துறைக்கு கடிதம் அனுப்பப்பட உள்ளது. உரிமம் ரத்து செய்யப்பட்டவுடன் அந்த கட்டடங்கள் சீல் வைக்கப்படும்.

சாகேத் பகுதியில் அடுக்குமாடிக் கட்டடம் மே 30-ஆம் தேதி இடிந்து விழுந்து 6 போ் உயிரிழந்த சம்பவத்தையடுத்து, அப்பகுதியில் விதிமுறைகளை மீறி இயங்கும் கட்டட உரிமையாளா்கள் மற்றும் பயனாளா்களுக்கு 32 கூடுதல் காலியிட உத்தரவு நோட்டீஸ்கள் வழங்கப்பட உள்ளன. இந்த நோட்டீஸ்கள் வழங்கப்பட்ட 72 மணி நேரத்திற்குப் பிறகு, விதிமுறைகளை பின்பற்றாத கட்டடங்கள் அனைத்தும் மூடப்படும்.

இதனிடையே, ஹௌஸ் ராணி மற்றும் சாகேத் பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள் மீது விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விதிமுறைகளை மீறி செயல்படும் அனைத்து நிறுவனங்களிடமும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி தெரிவித்தாா்.