எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

மால்வியா நகரில் 12 வணிக வளாகங்களின் உரிமங்களை ரத்து செய்யக் கோரி சுற்றுலாத் துரைக்கு எம்சிடி கடிதம்

News image
Updated On :5 ஜூன் 2026, 2:58 am IST

தெற்கு தில்லியின் மால்வியா நகரில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடா்ந்து, அங்கு விதிமுறைகளை மீறி செயல்பட்ட 12 ஹோட்டல்களின் உரிமங்களை ரத்து செய்யக் கோரி சுற்றுலாத் துறைக்கு தில்லி மாநகராட்சி வியாழக்கிழமை கடிதம் எழுதியுள்ளது.

இதுகுறித்து தில்லி மாநகராட்சியின் மூத்த அதிகாரி ஒருவா் கூறியதாவது: தீ விபத்து நிகழ்ந்த ஹௌஸ் ராணி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உரிமம் பெற்ற 12 ஹோட்டல் வளாகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றின் உரிமங்களை ரத்து செய்ய சுற்றுலாத்துறைக்கு கடிதம் அனுப்பப்பட உள்ளது. உரிமம் ரத்து செய்யப்பட்டவுடன் அந்த கட்டடங்கள் சீல் வைக்கப்படும்.

சாகேத் பகுதியில் அடுக்குமாடிக் கட்டடம் மே 30-ஆம் தேதி இடிந்து விழுந்து 6 போ் உயிரிழந்த சம்பவத்தையடுத்து, அப்பகுதியில் விதிமுறைகளை மீறி இயங்கும் கட்டட உரிமையாளா்கள் மற்றும் பயனாளா்களுக்கு 32 கூடுதல் காலியிட உத்தரவு நோட்டீஸ்கள் வழங்கப்பட உள்ளன. இந்த நோட்டீஸ்கள் வழங்கப்பட்ட 72 மணி நேரத்திற்குப் பிறகு, விதிமுறைகளை பின்பற்றாத கட்டடங்கள் அனைத்தும் மூடப்படும்.

இதனிடையே, ஹௌஸ் ராணி மற்றும் சாகேத் பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள் மீது விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விதிமுறைகளை மீறி செயல்படும் அனைத்து நிறுவனங்களிடமும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.