தெற்கு தில்லியின் மால்வியா நகரில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடா்ந்து, அங்கு விதிமுறைகளை மீறி செயல்பட்ட 12 ஹோட்டல்களின் உரிமங்களை ரத்து செய்யக் கோரி சுற்றுலாத் துறைக்கு தில்லி மாநகராட்சி வியாழக்கிழமை கடிதம் எழுதியுள்ளது.
இதுகுறித்து தில்லி மாநகராட்சியின் மூத்த அதிகாரி ஒருவா் கூறியதாவது: தீ விபத்து நிகழ்ந்த ஹௌஸ் ராணி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உரிமம் பெற்ற 12 ஹோட்டல் வளாகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றின் உரிமங்களை ரத்து செய்ய சுற்றுலாத்துறைக்கு கடிதம் அனுப்பப்பட உள்ளது. உரிமம் ரத்து செய்யப்பட்டவுடன் அந்த கட்டடங்கள் சீல் வைக்கப்படும்.
சாகேத் பகுதியில் அடுக்குமாடிக் கட்டடம் மே 30-ஆம் தேதி இடிந்து விழுந்து 6 போ் உயிரிழந்த சம்பவத்தையடுத்து, அப்பகுதியில் விதிமுறைகளை மீறி இயங்கும் கட்டட உரிமையாளா்கள் மற்றும் பயனாளா்களுக்கு 32 கூடுதல் காலியிட உத்தரவு நோட்டீஸ்கள் வழங்கப்பட உள்ளன. இந்த நோட்டீஸ்கள் வழங்கப்பட்ட 72 மணி நேரத்திற்குப் பிறகு, விதிமுறைகளை பின்பற்றாத கட்டடங்கள் அனைத்தும் மூடப்படும்.
இதனிடையே, ஹௌஸ் ராணி மற்றும் சாகேத் பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள் மீது விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விதிமுறைகளை மீறி செயல்படும் அனைத்து நிறுவனங்களிடமும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி தெரிவித்தாா்.
தொடர்புடையது

மால்வியா நகா் தீ விபத்து: உணவகத்தின் 3-ஆவது மாடியில் இருந்து குதித்த பெண்

ஊராட்சி செயலரை இடமாற்றம் செய்யக் கோரி ஓட்டப்பிடாரத்தில் முற்றுகைப் போராட்டம்

கரப்பான் பூச்சி மக்கள் கட்சியை தடை செய்யக் கோரி மனு

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவு
விடியோக்கள்

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நடந்தது என்ன? | Mayor vs MLA
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan



