அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பூட்டியே கிடக்கும் பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறை

ராணிப்பேட்டை புதிய பேருந்து நிலையத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் திறந்து  வைக்கப்பட்ட  பாலூட்டும் தாய்மார்களுக்கான

News image
Updated On :16 நவம்பர் 2017, 7:44 pm

DIN

ராணிப்பேட்டை புதிய பேருந்து நிலையத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் திறந்து  வைக்கப்பட்ட  பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறை பயன்பாடின்றி பூட்டியே கிடப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
பேருந்துகள் மூலம் வெளியூர் பயணம் மேற்கொள்ளும் தாய்மார்கள் தங்களது குழந்தைகளுக்கு சிரமமின்றி பாலூட்டும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிக்கு உள்பட்ட  பேருந்து  நிலையங்களில் தனி அறை திறக்கப்படும் என சட்டப் பேரவையில் ஜெயலலிதா அறிவித்தார்.
அதன்படி, தமிழக சுகாதாரத் துறை சார்பில் அனைத்து பேருந்து நிலையங்களிலும் தலா ரூ. 3 லட்சம் மதிப்பில் இருக்கைகள், மின்விசிறி, கழிப்பறை உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய நவீன அறைகள் கட்டப்பட்டன.
 கடந்த 2015-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் உலக தாய் பால் வாரத்தை முன்னிட்டு, பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறைகளை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திறந்து வைத்து பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தார். 
இதேபோல, ராணிப்பேட்டை புதிய பேருந்து நிலையத்தில் ஜெயலலிதாவால் திறக்கப்பட்ட பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறை தற்போது பயன்பாடின்றி பூட்டியே கிடக்கிறது. போதிய பராமிப்பு இல்லாததால் அறை பூட்டப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுதொடர்பாக நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.