பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

ரயில் தண்டவாளம் அருகே ஆண் சடலம் மீட்பு

காட்பாடி ரயில் தண்டவாளம் அருகே தூக்கிட்ட நிலையில் இருந்த ஆண் சடலத்தை போலீஸார் மீட்டனர். 

Updated On :3 ஆகஸ்ட் 2018, 1:44 am IST

காட்பாடி ரயில் தண்டவாளம் அருகே தூக்கிட்ட நிலையில் இருந்த ஆண் சடலத்தை போலீஸார் மீட்டனர். 
காட்பாடி ரயில் நிலையம் அருகே கிளித்தான்பட்டறை பகுதியில் ரயில்வே தண்டவாளத்தையொட்டி, ஆட்கள் ஒதுங்கி நிற்கும் அளவுக்கு சிறிய தடுப்பு உள்ளது. 
இந்தத் தடுப்பு கம்பியில் புதன்கிழமை காலை 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சிறிய கயிற்றால் சடலமாகத் தொடங்கினார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காட்பாடி காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர்.
போலீஸார் அங்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது, சடலத்தின் அருகே மதுபாட்டில், சிகரெட் பாக்கெட்டுகள் கிடந்தன. 
இறந்தவர் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இதையடுத்து போலீஸார் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.