நாளை கருப்புலீஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரி விழா

குடியாத்தம் நெல்லூர்பேட்டை சிவகாம சுந்தரி உடனுறை கருப்புலீஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரி விழா புதன்கிழமை நடைபெறுகிறது.
Updated on
1 min read

குடியாத்தம் நெல்லூர்பேட்டை சிவகாம சுந்தரி உடனுறை கருப்புலீஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரி விழா புதன்கிழமை நடைபெறுகிறது.
 இதையொட்டி காலை 10 மணிக்கு சுவாமிகளுக்கு மகா ருத்ராபிஷேகம், 12 மணிக்கு மகா தீபாராதனை, மாலை 4 மணிக்கு மங்கள இசை, 5 மணிக்கு திருமுறைப் பயிற்சி மாணவர்களின் திருமுறை, 7 மணிக்கு பக்தி நடனம், இரவு 10 மணிக்கு மாம்பலம் சகோரிகள் ஆர்.விஜயலட்சுமி, ஆர்.சித்ரா குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி, இரவு ஒரு மணிக்கு குடந்தை வி. லட்சுமணன் குழுவினரின் திருமுறைப் பண்ணிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. 
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழா கமிட்டி நிர்வாகிகள் புலவர் வே.பதுமனார், எஸ்.எஸ்.சந்தானம், ஆடிட்டர் எம்.கிருபானந்தம், வி.பிச்சாண்டி, மருத்துவர் எம்.எஸ்.திருநாவுக்கரசு உள்ளிட்டோர் செய்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com