குடியாத்தத்தை அடுத்த சீவூரில் உள்ள காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
இதையொட்டி அதிகாலை சாமிகளுக்கு சிறப்பு அபஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவர் அம்மன் சிலை பொருத்தப்பட்டு தேரோட்டம் தொடங்கியது. முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற ஊர்வலம் கோயில் அருகில் நிறைவுற்றது.
விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக் குழு நிர்வாகிகள் எஸ்.துரைசாமி, சேட்டு, சி.மூர்த்தி, லிங்கன், கிராம பொதுமக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.