வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டுறவு சங்கங்களுக்கான முதல்கட்டத் தேர்தலில் 162 கூட்டுறவு சங்கங்களுக்கு நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 20 சங்கங்களுக்கு ஏப்ரல் 2-ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்க நிர்வாகக் குழு உறுப்பினர் பதவிக்காலம் மே மாதம் முதல் வாரம் முடிவடைகிறது. இதையடுத்து தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களுக்கான நிர்வாகக் குழு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் வேளாண்மை, கைத்தறி, பால்வளம், வீட்டுவசதி, கதர் கிராமம் என 9 துறைகளின் கீழ் 675 கூட்டுறவு சங்கங்களில் 6,973 நிர்வாகக்குழு உறுப்பினர் பதவிகள் உள்ளன. இக்கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகக்குழு உறுப்பினர் தேர்தல் 4 நிலைகளாக நடக்கிறது.
முதல்கட்டமாக 186 கூட்டுறவு சங்கங்களுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 26-ஆம் தேதி நடைபெற்றது.
இதில், கூட்டுறவு இணைப் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள வேலூரிலுள்ள 28 சங்கங்களில் 540 பேரும், ராணிப்பேட்டையில் உள்ள 28 சங்கங்களில் 1,041 பேரும், திருப்பத்தூரில் உள்ள 25 சங்கங்களில் 1,023 பேரும் என மொத்தம் 2,604 பேரும், சார்-பதிவாளர் கட்டுப்பாட்டிலுள்ள 105 சங்கங்களில் 1,396 பேரும் என மொத்தம் 4 ஆயிரம் பேர் மனு தாக்கல்
செய்தனர்.
இந்த மனுக்கள் மீதான பரிசீலனை 27-ஆம் தேதி காலை 10 முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது.
இதில், பல்வேறு காரணங்களைக் காட்டி ஏராளமான மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. பின்னர், மனுக்கள் ஏற்கப்பட்ட விவரம் சங்க தகவல் பலகையில் வெளியிடப்பட்டது. இதனால் ஏற்பட்ட குளறுபடி காரணமாக பல கூட்டுறவு சங்கங்களில் முற்றுகைப் போராட்டங்களும் நடைபெற்றன. இந்நிலையில், வேட்புமனுவை வாபஸ் பெற புதன்கிழமை (மார்ச் 28) கடைசி நாளாகும்.
இதையடுத்து, பல சங்கங்களில் மனு தாக்கல் செய்திருந்தவர்கள் தங்களது வேட்புமனுக்களை வாபஸ் பெற்றுக் கொண்டனர். இதையடுத்து, இறுதிப்பட்டியல் புதன்கிழமை இரவு வெளியிடப்பட்டது.
இதன்படி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் கோட்டங்கங்களில் இணைப் பதிவாளர் கட்டுப்பாட்டில் மொத்தமுள்ள 81 கூட்டுறவு சங்கங்களில் 62 சங்கங்களுக்கான நிர்வாகிகள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதில், 2 சங்கங்களுக்கு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. 15 சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது.
இதேபோல், சார்-பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள 105 சங்கங்களில் 100 சங்கங்களுக்கு நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
மற்ற 5 சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதன்படி, மொத்தம் 20 கூட்டுறவு சங்கங்களுக்கு ஏப்ரல் 2-ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அம்பையில் பிரசவத்தில் தாய், சேய் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

பாளை.யில் இளம்பெண் தற்கொலை

பாளை. சிறையில் கைதிகள் மோதல்: இருவா் காயம்
தாழையூத்து அருகே வீட்டில் நகை திருட்டு: பெண் கைது
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

