மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

162 கூட்டுறவு சங்கங்களுக்கு நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு: 20 சங்கங்களுக்கு ஏப்.2-இல் வாக்குப்பதிவு

வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டுறவு சங்கங்களுக்கான முதல்கட்டத் தேர்தலில் 162 கூட்டுறவு சங்கங்களுக்கு நிர்வாகிகள் போட்டியின்றி

Updated On :29 மார்ச் 2018, 7:37 pm

வேலூர் மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டுறவு சங்கங்களுக்கான முதல்கட்டத் தேர்தலில் 162 கூட்டுறவு சங்கங்களுக்கு நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 20 சங்கங்களுக்கு ஏப்ரல் 2-ஆம் தேதி  வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்க நிர்வாகக் குழு உறுப்பினர் பதவிக்காலம் மே மாதம் முதல் வாரம் முடிவடைகிறது. இதையடுத்து தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களுக்கான நிர்வாகக் குழு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் வேளாண்மை, கைத்தறி, பால்வளம், வீட்டுவசதி, கதர் கிராமம் என 9 துறைகளின் கீழ் 675  கூட்டுறவு சங்கங்களில் 6,973 நிர்வாகக்குழு உறுப்பினர் பதவிகள் உள்ளன. இக்கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகக்குழு உறுப்பினர் தேர்தல் 4 நிலைகளாக நடக்கிறது.
முதல்கட்டமாக 186 கூட்டுறவு சங்கங்களுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 26-ஆம் தேதி நடைபெற்றது. 
இதில், கூட்டுறவு இணைப் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள வேலூரிலுள்ள 28 சங்கங்களில் 540 பேரும், ராணிப்பேட்டையில் உள்ள 28 சங்கங்களில் 1,041 பேரும், திருப்பத்தூரில் உள்ள 25 சங்கங்களில் 1,023 பேரும் என மொத்தம் 2,604 பேரும், சார்-பதிவாளர் கட்டுப்பாட்டிலுள்ள 105 சங்கங்களில் 1,396 பேரும் என மொத்தம் 4 ஆயிரம் பேர் மனு தாக்கல் 
செய்தனர். 
இந்த மனுக்கள் மீதான பரிசீலனை 27-ஆம் தேதி காலை 10 முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. 
இதில், பல்வேறு காரணங்களைக் காட்டி ஏராளமான மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. பின்னர், மனுக்கள் ஏற்கப்பட்ட விவரம் சங்க தகவல் பலகையில் வெளியிடப்பட்டது. இதனால் ஏற்பட்ட குளறுபடி காரணமாக பல கூட்டுறவு சங்கங்களில் முற்றுகைப் போராட்டங்களும் நடைபெற்றன. இந்நிலையில், வேட்புமனுவை வாபஸ் பெற புதன்கிழமை (மார்ச் 28) கடைசி நாளாகும். 
இதையடுத்து, பல சங்கங்களில் மனு தாக்கல் செய்திருந்தவர்கள் தங்களது வேட்புமனுக்களை வாபஸ் பெற்றுக் கொண்டனர். இதையடுத்து, இறுதிப்பட்டியல் புதன்கிழமை இரவு வெளியிடப்பட்டது.
இதன்படி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் கோட்டங்கங்களில் இணைப் பதிவாளர் கட்டுப்பாட்டில் மொத்தமுள்ள 81 கூட்டுறவு சங்கங்களில் 62 சங்கங்களுக்கான நிர்வாகிகள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதில், 2 சங்கங்களுக்கு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. 15 சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. 
இதேபோல், சார்-பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள 105 சங்கங்களில் 100 சங்கங்களுக்கு நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 
மற்ற 5 சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதன்படி, மொத்தம் 20 கூட்டுறவு சங்கங்களுக்கு ஏப்ரல் 2-ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.