தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

பெல் நிறுவன குடியிருப்பில் தொடர் திருட்டு

ராணிப்பேட்டை பெல் நிறுவனத்தின் பாதுகாக்கப்பட்ட குடியிருப்புப் பகுதியில் 4 வீடுகளின் பூட்டுகளை உடைத்து வெள்ளிப் பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

Updated On :9 அக்டோபர் 2018, 3:01 am IST


ராணிப்பேட்டை பெல் நிறுவனத்தின் பாதுகாக்கப்பட்ட குடியிருப்புப் பகுதியில் 4 வீடுகளின் பூட்டுகளை உடைத்து வெள்ளிப் பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
பெல் நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர்கள் காவியா, மோகன், கிறிஸ்டோபர் மற்றும் பாபு. இவர்கள் 4 பேரும் வீடுகளைப் பூட்டிவிட்டு வெளியூர் சென்றுள்ளனர். இந்நிலையில், காவியா சனிக்கிழமை வீட்டிற்கு வந்து பார்த்தபோது, பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே பீரோவில் இருந்த கால் கிலோ வெள்ளிப் பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
மேலும், மோகன், கிறிஸ்டோபர், பாபு ஆகியோரின் வீடுகளிலும் பூட்டுகளை உடைத்து திருடப்பட்டதும் தெரியவந்தது. திருடு போன பொருள்களின் விவரம் குறித்து உடனடியாக தெரியவில்லை. 
இதுகுறித்து சிப்காட் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இப்பகுதியில் 5-ஆவது முறையாக திருட்டுச் சம்பவம் நடந்துள்ளதால், பொதுமக்கள் 
அச்சமடைந்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.