தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை மீதான உயர்வைக் கண்டித்து குடியாத்தம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் புதிய பேருந்து நிலையம் எதிரே ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Updated On :22 அக்டோபர் 2018, 12:32 am

பெட்ரோல், டீசல் விலை மீதான உயர்வைக் கண்டித்து குடியாத்தம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் புதிய பேருந்து நிலையம் எதிரே ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அத்யாவசியப் பொருள்களின் விலை உயர்வுக்கு காரணமான பெட்ரோல், டீசல் மீதான விலை உயர்வை ரத்து செய்ய மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் குடியாத்தம் தொகுதி செயலர் ஆ. கிருபானந்தம் தலைமை வகித்தார். 
தொகுதி தலைவர் கி. உதயகுமார், வேலூர் மாவட்டத் தலைவர் இரா.கருணாநிதி, கே.வி.குப்பம் தொகுதி செயலர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்டப் பொறுப்பாளர் தரணிதரன், நகரப் பொறுப்பாளர் குமரன், கா.கோபி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.