/
திருப்பத்தூர் ஏரிப் பகுதியில் கொட்டப்பட்டிருந்த கழிவுகளை, நகராட்சியினர் புதன்கிழமை அகற்றினர்.
திருப்பத்தூர் ஏரி மாசடைந்து வருவது குறித்தும், ஏரியில் கொட்டப்படும் உணவுக் கழிவுகள் குறித்தும் தினமணி நாளிதழில் புதன்கிழமை விரிவான செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக திருப்பத்தூர் நகர்மன்ற ஆணையர் இரா.சந்திரா உத்தரவின்பேரில், துப்புரவு அலுவலர் ராஜரத்தினம், ஆய்வாளர் விவேக் மற்றும் நகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் ஏரியின் முகப்பில் கொட்டப்பட்டிருந்த குப்பை மற்றும் கழிவுகளை அகற்றினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.






