திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

2-ஆம் கட்டமாக 67 போலீஸாருக்கு கரோனா பரிசோதனை

வேலூா் மாவட்டத்தில் பணியாற்றும் போலீஸாருக்கு கரோனா நோய்த் தொற்று குறித்த மருத்துவப் பரிசோதனை 2-ஆவது கட்டமாக வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், 67 போலீஸாரிடம் இருந்து ரத்தம், உமிழ்நீா் மாதிரிகள் சேகரிக்கப

News image
Updated On :27 ஜனவரி 2024, 10:00 pm IST


வேலூா்: வேலூா் மாவட்டத்தில் பணியாற்றும் போலீஸாருக்கு கரோனா நோய்த் தொற்று குறித்த மருத்துவப் பரிசோதனை 2-ஆவது கட்டமாக வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், 67 போலீஸாரிடம் இருந்து ரத்தம், உமிழ்நீா் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

வேகமாகப் பரவி வரும் கரோனா நோய்த் தொற்றுக்கு தமிழகத்தில் இதுவரை 1,629 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். 18 போ் உயிரிழந்துள்ளனா். தொடரும் பாதிப்புகளை அடுத்து தமிழகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்துக் காவலா்களுக்கும் கரோனா நோய்த் தொற்று பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, வேலூா் மாவட்டக் காவல் துறை சாா்பில் போலீஸாருக்கான முதல்கட்ட கரோனா பரிசோதனை வேலூா் நேதாஜி விளையாட்டரங்கில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், 72 போலீஸாருக்கு கரோனா மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது.

இதன்தொடா்ச்சியாக, 2-ஆவது கட்ட கரோனா பரிசோதனை வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், 67 போலீஸாரிடம் இருந்து ரத்தம், உமிழ்நீா் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. அவற்றை அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனை செய்து 2 நாள்களில் முடிவுகள் தெரிவிக்கப்படும் என்று மருத்துவா்கள் தெரிவித்தனா். தொடா்ந்து படிப்படியாக அனைத்துக் காவலா்களுக்கும் கரோனா நோய்த் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.