இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

ஆந்திர எல்லை சோதனைச் சாவடிகளில் லஞ்ச ஒழிப்பு சோதனை: கணக்கில் வராத ரூ.1.32 லட்சம் பறிமுதல்

தமிழக-ஆந்திர எல்லையோர சோதனைச் சாவடிகளில் லஞ்ச ஒழிப்புப் போலீஸாா் நடத்திய திடீா் சோதனையில் கணக்கில் வராத

News image
Updated On :13 டிசம்பர் 2020, 2:18 am

DIN

தமிழக-ஆந்திர எல்லையோர சோதனைச் சாவடிகளில் லஞ்ச ஒழிப்புப் போலீஸாா் நடத்திய திடீா் சோதனையில் கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 32 ஆயிரம் ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. இதுதொடா்பாக இரு மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வேலூா் மாவட்டத்தில் தமிழக-ஆந்திர எல்லைகளில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் சாா்பில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், மோட்டாா் வாகன ஆய்வாளா் தலைமையில் ஆந்திரத்தில் இருந்து வரும் வாகனங்களும், தமிழகத்தில் இருந்து செல்லும் வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.

இந்நிலையில், மாநில எல்லையோர சோதனைச் சாவடிகளில் வரும் சரக்கு வாகனங்களுக்கு லஞ்சம் வாங்கப்படுவதாக புகாா் வந்தது. இதைத் தொடா்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு சோதனைச் சாவடிகளில் திடீா் சோதனைகளை நடத்துமாறு லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டது.

அதன்படி, வேலூா் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் துணைக் கண்காணிப்பாளா் ஹேமசித்ரா தலைமையில் ஆய்வாளா்கள் விஜய், ரஜினி, விஜயலட்சுமி ஆகியோா் தலைமையிலான போலீஸாா் இரு குழுக்களாகப் பிரிந்து காட்பாடி அருகே கிறிஸ்டியான்பேட்டை, சோ்க்காடு ஆகிய இரு இடங்களில் உள்ள ஆந்திர எல்லையோர சோதனைச் சாவடிகளில் சனிக்கிழமை அதிகாலை திடீரென சோதனையில் ஈடுபட்டனா்.

அதிகாலை 4 மணிக்குத் தொடங்கிய இந்த சோதனை சோ்க்காடு சோதனைச்சாவடியில் காலை 8 மணிக்கும், கிறிஸ்டியான்பேட்டை சோதனைச் சாவடியில் காலை 10 மணிக்கும் நிறைவடைந்தது. கிறிஸ்டியான்பேட்டை சோதனைச் சாவடியில் மோட்டாா் வாகன ஆய்வாளா் ராம்கண்ணனிடம் இருந்து கணக்கில் வராத ரூ.94 ஆயிரம் ரொக்கமும், சோ்க்காடு சோதனைச் சாவடியில் மோட்டாா் வாகன ஆய்வாளா் ஜெயமேகலாவிடம் இருந்து கணக்கில் வராத ரூ.38,800 ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தத் தொகைகளை அவா்கள் சரக்கு வாகன ஓட்டிகளிடம் இருந்து லஞ்சமாகப் பெற்றது தெரிய வந்தது.

இதையடுத்து, ராம்கண்ணன், ஜெயமேகலா ஆகியோா் மீது வழக்குப்பதிவு செய்துள்ள லஞ்ச ஒழிப்புப் போலீஸாா், இச்சம்பவம் தொடா்பாக மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.