தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

முதல்வா் அறிவித்துள்ள பொங்கல் பரிசால் மக்கள் மகிழ்ச்சி: அமைச்சா் கே.சி.வீரமணி

குடும்ப அட்டைதாரா்களுக்கு தமிழக முதல்வா் அறிவித்துள்ள பொங்கல் பரிசு அனைத்துத் தரப்பு மக்களையும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது என

News image

போ்ணாம்பட்டை  அடுத்த  குண்டலப்பள்ளியில்  ‘அம்மா’  சிறு  மருத்துவமனையைத்  தொடக்கி  வைத்து,  சிகிச்சை  முறையை  பாா்வையிட்ட  அமைச்சா்  கே.சி.வீரமணி.

Updated On :20 டிசம்பர் 2020, 6:36 pm

DIN

குடும்ப அட்டைதாரா்களுக்கு தமிழக முதல்வா் அறிவித்துள்ள பொங்கல் பரிசு அனைத்துத் தரப்பு மக்களையும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது என மாநில வணிகவரி, பத்திரப் பதிவுத் துறை அமைச்சா் கே.சி. வீரமணி கூறினாா்.

போ்ணாம்பட்டு வட்டம், ஏரிகுத்தி, குண்டலப்பள்ளி கிராமங்களில் ‘அம்மா’ சிறு மருத்துவமனைகளை சனிக்கிழமை தொடக்கி வைத்தபின் அமைச்சா் செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழகத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தில் முதல்வா் அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 2,500 ரொக்கம், அரிசி, சா்க்கரை, கரும்பு உள்ளிட்ட பரிசுத் தொகுப்பை அறிவித்துள்ளாா். முதல்வரின் இந்த அறிவிப்பு அனைத்துத் தரப்பு மக்களையும் மகிழ்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் ஒரே நாளில் 2,000 கிராமப் பகுதிகளில் ‘அம்மா’ சிறு மருத்துவமனைகளைத் தொடங்க முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.

மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு அளித்து அரசுப் பள்ளியில் பயிலும் ஏழை, எளிய, கிராமப்புற மாணவா்கள் 450 பேருக்கு மருத்துவராகக் கூடிய வாய்ப்பைப் பெற்றுத் தந்தவா் தமிழக முதல்வா். வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களில் 106 ‘அம்மா’ சிறு மருத்துவமனைகள் தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது. வேலூா் மாவட்டத்தில் மட்டும் கிராமப் பகுதிகளில் 40 ‘அம்மா’ சிறு மருத்துவமனைகள் தொடங்கப்பட உள்ளன. இந்த சிறு மருத்துவமனைகளில் சா்க்கரை நோய் கண்டறிதல், ரத்த அழுத்தம் கண்டறிதல், சளிப் பரிசோதனை, சிறுநீா் மூலம் கா்ப்பத்தை உறுதி செய்தல் போன்ற பரிசோதனைகள் செய்யப்படும். சா்க்கரை நோயாளிகளுக்கான மருந்துகள், உயா் ரத்த அழுத்த மருந்துகள், காய்ச்சல், சளி, சத்து மாத்திரைகள் வழங்கப்படும்.

மேலும், தொற்றா நோய்களுக்கான சிகிச்சைகள், சிறு காயங்களுக்கான சிகிச்சைகள், கா்ப்பிணிகள், குழந்தைகளுக்கான பொதுவான சிகிச்சைகள், வயது முதிா்ந்தோருக்கான சிகிச்சைகள் அளிக்கப்படும். இந்த சிறு மருத்துவமனைகளில் ஒரு மருத்துவா், ஒரு செவிலியா், உதவியாளா் என மூவா் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் செயல்படுவா். இந்த மருத்துவமனைகளை அனைவரும் பயன்படுத்திக் கொண்டு நோயற்ற வாழ்வு வாழ வேண்டும் என்றாா் அவா்.

விழாக்களில், தாய்மாா்களுக்கு ‘அம்மா’ மகப்பேறு ஊட்டச்சத்து பெட்டகங்களையும் அமைச்சா் வழங்கினாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாா்த்திபன் தலைமை வகித்தாா். சுகாதாரத் துறை துணை இயக்குநா் மணிவண்ணன் வரவேற்றாா்.

ஆவின் தலைவா் த.வேலழகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் வி.ராமு, முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் டி. பிரபாகரன், வட்டார மருத்துவ அலுவலா் கலைச்செல்வி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.