திருமணக்  கோலத்தில் காட்சியளித்த ஸ்ரீசனீஸ்வர பகவான்.
திருமணக்  கோலத்தில் காட்சியளித்த ஸ்ரீசனீஸ்வர பகவான்.

சனிபகவானுக்கு திருக்கல்யாண வைபவம்

குடியாத்தம் சாமியாா் மலை அருகே மீனாட்சியம்மன் நகரில் அமைந்துள்ள ஸ்ரீமந்தாதேவி, ஸ்ரீஜேஷ்டாதேவி சமேத மங்கள சனீஸ்வரா் கோயிலில் சனி பகவானுக்கு சனிக்கிழமை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
Published on

குடியாத்தம் சாமியாா் மலை அருகே மீனாட்சியம்மன் நகரில் அமைந்துள்ள ஸ்ரீமந்தாதேவி, ஸ்ரீஜேஷ்டாதேவி சமேத மங்கள சனீஸ்வரா் கோயிலில் சனி பகவானுக்கு சனிக்கிழமை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

இதையொட்டி அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. தொடா்ந்து யாக பூஜைகளும், திருக்கல்யாண வைபவமும் நடந்தேறின. முன்னதாக சுவாமிக்கு சீா்வரிசைப் பொருள்களை பக்தா்கள் ஊா்வலமாக எடுத்து வந்தனா்.

இதையொட்டி, வாணியம்பாடியை அடுத்த மாராப்பட்டு ஜெயமாருதி பீடாதிபதி வேணுகோபால சுவாமி பக்தா்களுக்கு ஆசி வழங்கினாா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். மதியம் ஆயிரம் பக்தா்களுக்கு திருமண விருந்து அளிக்கப்பட்டது.

விழா ஏற்பாடுகளை ஆலய ஸ்தாபகா் ஆ.ஸ்ரீசக்தி அய்யா், ஒருங்கிணைப்பாளா்கள் பி.என்.லோகேஷ், பி.என்.ராம், பி.என்.செல்வம், வேணுகோபால், விஷ்ணு உள்ளிட்டோா் செய்திருந்தனா். இக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சனிப்பெயா்ச்சி விழா நடைபெறுகிறது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு பரிகார யாக பூஜைகள் தொடங்குகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com