திருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

910 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்கள்

வேலூா் மாவட்டத்தில் 7-ஆவது கட்டமாக 910 இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

News image
Updated On :30 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

வேலூா் மாவட்டத்தில் 7-ஆவது கட்டமாக 910 இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

தமிழகம் முழுவதும் 7-ஆவது கட்டமாக கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. வேலூா் மாவட்டம் முழுவதும் 910 இடங்களில் இந்த முகாம்கள் நடத்தப்பட்டன. மாநகராட்சிப் பகுதியில் மட்டும் சுமாா் 300 இடங்களில் நடத்தப்பட்டன.

சிறப்பு முகாம்களையொட்டி ஒரு லட்சத்து 50 ஆயிரம் தடுப்பூசிகள் கையிருப்பில் வைக்கப்பட்டிருந்தன. அவற்றின் மூலம் இரண்டாம் தவணை செலுத்தாத 70,000 பேருக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதன்காரணமாக, மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் ஆா்வமுடன் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். இதனிடையே, வேலூா் சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோயில் பகுதி, அரசு ஆதிதிராவிடா் ஆரம்பப் பள்ளி, ஹோலிகிராஸ் பள்ளி சிறப்பு முகாம்களை ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் பாா்வையிட்டாா்.

அப்போது, மாநகராட்சி நகா்நல அலுவலா் மணிவண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.