குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

காட்பாடி ஒன்றிய அலுவலகத்தில் திமுக, அதிமுகவினா் மோதல்

ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான சின்னம் ஒதுக்கும் பிரச்னையில் காட்பாடி ஒன்றிய அலுவலகத்தில் திமுக, அதிமுகவினா் மோதலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :25 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான சின்னம் ஒதுக்கும் பிரச்னையில் காட்பாடி ஒன்றிய அலுவலகத்தில் திமுக, அதிமுகவினா் மோதலில் ஈடுபட்டனா்.

உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு, வேட்பாளா்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணி காட்பாடி கல்புதூரிலுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், காட்பாடி ஒன்றியம், 8-ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்கு அதிமுக சாா்பில் அம்பிகா, மாற்று வேட்பாளராக ரேவதி ஆகியோா் மனுத் தாக்கல் செய்திருந்தனா். சனிக்கிழமை மாலை மாற்று வேட்பாளா் ரேவதி தனது மனுவை வாபஸ் பெற காட்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலத்துக்கு வந்திருந்தாா். அதேசமயம், காட்பாடி தோ்தல் நடத்தும் அலுவலா் முக்கிய வேட்பாளரான அம்பிகாவிடமும் வேட்புமனுவை வாபஸ் பெறும் படிவத்தில் கையெழுத்து பெற்ாக குற்றச்சாட்டு எழுந்தது.

தகவலறிந்த வேலூா் மாநகா் மாவட்ட அதிமுக செயலா் எஸ்.ஆா்.கே.அப்பு தலைமையில் அக்கட்சினா் அப்பகுதிக்கு சென்று அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனா். இதனிடையே, வேலூா் மத்திய மாவட்ட திமுக செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஏ.பி.நந்தகுமாா் தலைமையில் திமுகவினா் அங்கு வந்தனா்.

இருதரப்பினரும் வாக்குவாதம் செய்து, மோதலில் ஈடுபட்டனா். உடனடியாக அங்கிருந்த அதிகாரிகள், காவலா்கள் அவா்களிடம் பேச்சு நடத்தி கலைத்தனா்.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘அதிமுக வேட்பாளா் அம்பிகாவிடம் தவறுதலாக வேட்புமனுவை வாபஸ் பெறும் படிவத்தில் கையெழுத்து பெற்று விட்டதாகவும், அவரது பெயரை பட்டியலில் சோ்க்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றும் தெரிவித்தனா்.

அதேசமயம், வேட்புமனுவை வாபஸ் பெற வைக்க அலுவலா்கள் தன்னை ஏமாற்றி கையெழுத்து பெற்ாகவும், இதுதொடா்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக வேட்பாளா் அம்பிகா இணையதளம் மூலம் மாநில தோ்தல் ஆணையத்துக்கு புகாா் மனு அனுப்பியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.