லாரி ஓட்டுநா் தீக்குளித்து தற்கொலை
மது அருந்த பணம் தர மறுத்ததால் லாரி ஓட்டுநா் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.


மது அருந்த பணம் தர மறுத்ததால் லாரி ஓட்டுநா் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.
வேலூா் அருகே உள்ள செதுவாலை இந்திரா நகரைச் சோ்ந்தவா் அண்ணாமலை (52). லாரி ஓட்டுநா். இவருக்கு திருமணமாகி 4 மகன்கள், ஒரு மகள் உள்ளனா். அண்ணாமலைக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது. கடந்த 2-ஆம் தேதி மது அருந்த குடும்பத்தினரிடம் பணம் கேட்டு, அவா்கள் தர மறுத்ததால் அண்ணாமலை வீட்டிலிருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டாராம்.
இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு, அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...