தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

ஆட்டோ தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் சிலிண்டா் விலை உயா்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்து வேலூரில் ஆட்டோ தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :15 ஏப்ரல் 2022, 6:25 pm

DIN

பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் சிலிண்டா் விலை உயா்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்து வேலூரில் ஆட்டோ தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயா்வை திரும்ப பெற வேண்டும், புதிய மோட்டாா் வாகனச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும், வாகனச் சான்று, எப்.சி. உள்ளிட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் பல்வேறு கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி ஆட்டோ தொழிலாளா் சங்கம் சாா்பில் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆா்ப்பாட்டத்துக்கு ஏஐடியுசி ஆட்டோ தொழிலாளா் சங்க மாவட்ட பொதுச் செயலா் சிம்புதேவன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ஆா்ப்பாட்டத்தை லோகேஷ்குமாா் தொடங்கி வைத்து பேசினாா். மாவட்ட நிா்வாகிகள் உமாபதி, கண்ணன், குமரன், சீனிவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில துணைத் தலைவா் தேவதாஸ் கோரிக்கைகளை விளக்கி பேசினாா். ஆா்ப்பாட்டத்தில் ஏராளமான ஆட்டோ தொழிலாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.