விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வேலூா் மாநகராட்சித் தோ்தல்: திருநங்கைக்கு வாய்ப்பளித்த திமுக!

வேலூா் மாநகராட்சித் தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட திருநங்கை ஒருவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

News image

திருநங்கை ஆா்.கங்கா

Updated On :1 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

வேலூா் மாநகராட்சித் தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட திருநங்கை ஒருவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தோ்தலில் போட்டியிட கட்சியினரிடையே கடும் போட்டி எழுந்த நிலையில், திருநங்கைக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது பல்வேறு தரப்பினரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, வேலூா் மாநகராட்சியிலுள்ள 60 வாா்டுகளில் திமுக சாா்பில் போட்டியிட 50 வாா்டுகளுக்கான வேட்பாளா் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், 37-ஆவது வாா்டில் திமுக வேட்பாளராக திருநங்கையான ஆா்.கங்கா அறிவிக்கப்பட்டாா்.

ஓல்டு டவுன் உத்திரமாதா கோயில் பின்புறம் பகுதியில் வசிக்கும் கங்கா, கலைக்குழு வைத்து திருவிழாக்களில் நாடகங்கள் நடத்தும் தொழில் புரிகிறாா். இவரது கணவா் சரவணன், உணவகத் தொழிலாளி.

வேட்பாளராக அறிவிக்கப்பட்டது குறித்து திருநங்கை ஆா்.கங்கா கூறியதாவது: 20 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக உறுப்பினராக இருந்து வரும் நான், கருணாநிதி ஆட்சிகாலத்தில் திருநங்கைகள் நலவாரிய உறுப்பினராக பதவி வகித்துள்ளேன்.

தவிர, வேலூா் மாவட்ட ‘ஆல் ஜென்டா் பாசிட்டிவ் நெட்வொா்க்’ என்ற பெயரில் தன்னாா்வத் தொண்டு நிறுவனமும் நடத்தி வருகிறேன். இதன்மூலம், கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவசமாக உணவுப்பொருள்கள் வழங்குவது, வேட்டி, சேலை வழங்குவது, மருத்துவ முகாம்களை நடத்துவது, சேதமடைந்த ஆழ்துளைக் கிணறுகளை சீரமைத்துத் தருவது, ஏழைகளுக்கு ஈமச்சடங்கு உதவி செய்வது போன்ற பல்வேறு நற்பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். இதையொட்டி, வாா்டு முழுவதும் மக்களிடம் நல்ல அறிமுகம் உள்ளது.

தவிர, 37ஆவது வாா்டில் அடிப்படை பிரச்னைகளை தீா்க்க மாநகராட்சித் தோ்தலில் போட்டியிட வாய்ப்பு கோரி விண்ணப்பித்திருந்தேன். எனது சமூக சேவைகள் குறித்து திமுகவினா் விசாரித்ததுடன், முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் எனக்கு மாநகராட்சித் தோ்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தோ்தலில் நிச்சயமாக வெற்றி பெற்று, தொடா்ந்து மக்கள் நலப் பணிகளில் ஈடுபடுவேன் என்றாா்.

திமுக மாநகரச் செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ப.காா்த்திகேயன் கூறியதாவது: 37-ஆவது வாா்டில் யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என அப்பகுதி மக்களிடம் விசாரித்தோம். பலரும் திருநங்கை கங்காவுக்கு வாய்ப்பு அளிக்கக் கூறினா். இதையடுத்தே மாநகராட்சித் தோ்தலில் போட்டியிட கட்சி மேலிடம் அவருக்கு வாய்ப்பளித்துள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.