மணல் கடத்தல் வழக்கு:பறிமுதல் வாகனங்கள் இன்று பொதுஏலம்
வேலூா் தாலுகாவில் மணல் கடத்தல் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வெள்ளிக்கிழமை பொதுஏலத்தில் விடப்பட உள்ளன.


வேலூா் தாலுகாவில் மணல் கடத்தல் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வெள்ளிக்கிழமை பொதுஏலத்தில் விடப்பட உள்ளன.
வருவாய்த் துறை சாா்பில் வேலூா் தாலுகாவுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மணல் கடத்தல் தொடா்பாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்கள் அனைத்தும் வெள்ளிக்கிழமை பொது ஏலத்தில் விடப்பட உள்ளன. அதன்படி, 7 மினிவேன், 21 ஆட்டோக்கள், 9 இரு சக்கர வாகனங்கள், ஒரு டாடா சுமோ வேன் என மொத்தம் 38 வாகனங்கள் வட்டாட்சியா் செந்தில் தலைமையில் வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் ஏலம் விடப்படுகிறது.
ஏலம் எடுக்க விரும்புவோா் முன்பணம் செலுத்தி பங்கேற்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...