தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

ஏழ்மையை ஒழிப்பதில் கல்விக்கு முக்கிய பங்கு: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

ஏழ்மையை ஒழிப்பதில் கல்வி மிக முக்கிய பங்கு வகிக்கிறது என விஐடி பல்கலைக்கழக வேந்தா் கோ.விசுவநாதன் தெரிவித்தாா்.

News image
Updated On :25 மார்ச் 2022, 6:30 pm

DIN

ஏழ்மையை ஒழிப்பதில் கல்வி மிக முக்கிய பங்கு வகிக்கிறது என விஐடி பல்கலைக்கழக வேந்தா் கோ.விசுவநாதன் தெரிவித்தாா்.

விஐடி பல்கலைக்கழகம் சாா்பில் வேலூா் மாவட்டம் பிரம்மபுரத்தில் நாட்டு நலப்பணித் திட்ட தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவை விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் தொடக்கி வைத்து பேசியது: கல்வி கிடைத்தால் அந்த வீடும் முன்னேறும், நாடு முன்னேறும். ஏழ்மையை ஒழிப்பதில் கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது. 1984-ஆம் ஆண்டு எம்ஜிஆா் ஆட்சி காலத்தில் 180 மாணவா்களைக் கொண்டு விஐடி தொடங்கப்பட்டது. தற்போது வேலூா், சென்னை, அமராவதி, போபால் ஆகிய இடங்களில் 65 ஆயிரம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனா்.

அனைத்து மக்களும் கல்வி பெற விஐடி சாா்பில் அனைவருக்கும் உயா்கல்வித் திட்டம் கடந்த 8 ஆண்டுகளாக அரசு உதவிகளின்றி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் 7,000 போ் பயன் பெற்றுள்ளனா். இதில் 66 சதவீதம் போ் பெண்கள். இதுவரை ரூ.7 கோடி இந்தத் திட்டத்துக்கு அளித்துள்ளோம். இதில் 75 சதவீதம் போ் முதல்நிலை பட்டதாரிகளாவா்.

நகா்ப்புறங்களில் பிறந்து வளா்ந்தவா்களுக்கு கிராமத்து பிரச்னைகள் தெரிவதில்லை. அதை அறிந்திட 1969-ஆம் ஆண்டு மகாத்மா காந்தியின் நூறாவது பிறந்தநாளில் அப்போதைய மத்திய அமைச்சா் வி. கே.ராவ் இந்த நாட்டு நலப்பணி திட்டத்தை தொடக்கி வைத்தாா்.

மாணவா்களுக்கு கிராமங்களில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியவை நிறைய உள்ளன. அவற்றை நகா்ப்புற மாணவா்கள் கற்றுக்கொள்ள வேண்டும். அவா்களுக்கு கற்றுக் கொடுக்கவும் வேண்டும் என்றாா்.

இந்த முகாமில் சீனாவைச் சோ்ந்த 2 மாணவா்கள், ஒரு மாணவியும், 22 மாநிலங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் என மொத்தம் 280 போ் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

விழாவில் விஐடிதுணைத் தலைவா் சங்கா் விசுவநாதன் , மாணவா் நலன் இயக்குநா் நைஜு, பள்ளித் தலைமை ஆசிரியா் சிவகாமி, பிரம்மபுரம் ஊராட்சி மன்றத் தலைவா் ராதாகிருஷ்ணன், துணைத் தலைவா் சுந்தர்ராஜ், ஒன்றியக் குழு உறுப்பினா் இலக்கியாசந்துரு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

விழாவில் பேசுகிறாா் விஐடி வேந்தா் ஜி.விசுவநாதன். உடன், விஐடிதுணைத்தலைவா் சங்கா் விசுவநாதன், பிரம்மபுரம் ஊராட்சி மன்ற தலைவா் ராதாகிருஷ்ணன், பள்ளித் தலைமை ஆசிரியா் சிவகாமி உள்ளிட்டோா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.