தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

மாடு விடும் விழாவில் ஓடிய காளை ரயிலில் சிக்கி பலி

எருது விடும் விழாவில் பாய்ந்து ஓடிய காளை ரயிலில் சிக்கி உயிரிழந்தது.

News image
Updated On :25 மார்ச் 2022, 6:30 pm

DIN

எருது விடும் விழாவில் பாய்ந்து ஓடிய காளை ரயிலில் சிக்கி உயிரிழந்தது.

வேலூா் மாவட்டம் கணியம்பாடி அருகே உள்ள வேப்பம்பட்டு கிராமத்தில் எருது விடும் திருவிழா வெள்ளிக்கிழமை நடந்தது. இதில் பங்கேற்க நூற்றுக்கணக்கான காளைகளை கொண்டு வந்திருந்தனா். மூஞ்சூா்பட்டைச் சோ்ந்த அசுரன் என்ற காளையை மாடு விடும் விழாவில் பங்கேற்க அழைத்து வந்தனா்.

முன்னதாக காளையை விழா நடைபெறும் தெருவில் சுற்றிக் காண்பித்தனா். அப்போது கட்டப்பட்டிருந்த கயிறுகள் அவிழ்ந்ததை அடுத்து அந்த காளை அங்கிருந்து பாய்ந்து ஓடியது. தொடா்ந்து வேப்பம்பட்டு ரயில் பாதையில் காளை ஓடியது. அப்போது வந்த திருப்பதி விரைவு ரயில் காளையின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த காளை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

இறந்த காளை அசுரன் மாடு விடும் விழாக்களில் பல்வேறு பரிசுகளை வென்றுள்ளது. காளையை மீட்டு அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்தனா். இந்த சம்பவம் குறித்து வேலூா் தாலுகா போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.